இதுபோல் ஒரு படம் இதுவரை வந்ததில்லை, இனியும் வராது: விக்ராந்த்

  • IndiaGlitz, [Monday,July 01 2019]

ஒட்டகத்தை முக்கிய கேரக்டராக்கி உருவாக்கப்பட்டுள்ள முதல் இந்திய திரைப்படமான 'பக்ரீத்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த படத்தின் நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குனர் மதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் விக்ராந்த் பேசியதாவது:

நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப்படம் அந்த தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை. இனியும் வராது. இயக்குநர் ஜெகதீசன் அவர்களோடு மீண்டும் வேலை பண்ணவேண்டும். தயாரிப்பாளர் முருகராஜ் அண்ணன் தான் இந்தப்படத்தை பெரிதாக கொண்டு வர வேண்டும் என்றார். இமான் சார் ரூபன் போன்றவர்கள் இந்தப்படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்தார்கள்.

முருகராஜ் அண்ணன் எனக்கு 13 வருடமாக தெரியும். நிறைய நொந்துவிட்டார். ஆனால் இந்தக் கதை மீது அவருக்கு பெரிய நம்பிக்கை. இந்த படத்தில் வரும் ஒட்டகத்தை கொண்டு வருவதற்கு அவ்வளவு சிரமப்பட்டார். ஓட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு. அந்த ஒட்டகத்தை அனுமதி வாங்கி கொண்டுவர 8 மாதங்கள் ஆகியது. ஒட்டகத்தை தத்தெடுத்து பயிற்சி கொடுத்து, அதனுடன் நாங்கள் பழக ஒரு மாதம் ஆகியது. மேலும் அந்த ஒட்டகத்தை 100 நாளில் ஒப்படைக்க வேண்டும் என்ற டெட்லைன் வேறு இருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களுக்கு ஒட்டகத்தை அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தினோம். வானிலை, மழை என பல பஞ்சாயத்து இருந்தது. உண்மையிலேயே தயாரிப்பாளருக்கும் ஒட்டகத்திற்கும் தான் பெரிய நன்றி சொல்லணும். இப்படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சிகள் கூட இல்லை. படத்தைப் பார்த்த அனைவருமே பெரிதாகப் பாராட்டி இருக்கிறார்கள். நிச்சயம் இந்த நல்ல படத்தை பத்திரிகையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்’

More News

உலக பிரபலம் தமிழருடன் சச்சின் விரும்பி எடுத்த புகைப்படம்

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது இந்தியர்கள் மட்டுமின்றி உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின்

இணையத்தில் வைரலாகும் 'பிகில்' விஜய்யின் ஐடி கார்டு

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் விஜய், அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்

ரித்விகா சொன்னதை தானே மதுமிதாவும் சொன்னாங்க? முன்னாள் பிக்பாஸ் பிரபலம் கேள்வி

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் சாம்பியனுமான ரித்விகா தான் ஒரு தமிழ்ப்பொண்ணு என்று கூறியபோது யாரும் கோபப்படவில்லை, மாறாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

திருமணம் எப்போது? ரசிகரின் கேள்விக்கு 'நச்சென' பதிலளித்த ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாஸன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்தார் என்பதும் அந்த காதலும் சமீபத்தில் பிரேக் அப் ஆனது என்பதும் தெரிந்ததே.

சமுத்திரக்கனியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குனரும் குணசித்திர நடிகருமான சமுத்திரக்கனி நடித்த 'கென்னடி கிளப்', 'அடுத்த சாட்டை', 'சில்லு கருப்பட்டி' போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும்