நம்ம கேப்டன் விராட் கோலி வீட்டில் விஷேசம்… டிவிட்டரில் தகவல்!!!

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தனது டிவிட்டர் பதிவில் “நாங்கள் இனிமேல் 3 பேர், ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது” என மகிழ்ச்சி செய்தியை தெரிவித்து இருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இந்த செய்தியை வெளியிட்டவுடன் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இவர் இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியை நடிகை அனுஷ்கா ஷர்மாவும் தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக ஷாருக்குடன் ஷீரோ என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்தார். அதற்குப் பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார். இந்நிலையில் எப்போ விஷேஷம் எனப் பலரும் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். தற்போது அவர் மகிழ்ச்சி செய்தியை அறிவித்து இருக்கிறார். இதனால் திரைத்துறையினர் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா தம்பதியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண்: தனிமைப்படுத்தப்பட்ட ஓட்டலில் தற்கொலை

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவர் தனிமைப்படுத்தும் காலத்திற்காக சென்னை ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தியேட்டரை திறந்துவிட்டு டாஸ்மாக்கை மூடுங்க: அரசுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் நடிகர்

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் 'தியேட்டரை திறந்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்' என அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

எஸ்பிபிக்கு பிசியோதெரபி சிகிச்சை: எஸ்.பி.பி. சரணின் புதிய வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உலகின் நெம்பர் ஒன் பணக்காரர் இவர்தான்… ஃபோர்ப்ஸ் வெளியிட்ட சுவாரசியத் தகவல்!!!

உலகப் பிரபலங்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு வெளியிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் நெம்பர் ஒன் பணக்காரர் பட்டியலைத் தற்போது வெளியிட்டுள்ளது.

நீச்சல் குளத்தில் தவறிவிழுந்த நண்பனை துரித வேகத்தில் காப்பாற்றிய 3 வயது சிறுவன்!!! வைரலாகும் வீடியோ!!!

பிரேசில் நாட்டில் 3 வயது சிறுவன் ஆர்தர் டி ஒலிவியரா நீச்சல் குளத்தில் தவறி விழுந்த தன்து நண்பனை காப்பாற்றி தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறான்.