வலியில் துடித்த இங்கிலாந்து வீரர்: முதல் நபராக உதவிக்கு ஓடி வந்த விராத்: வைரல் வீடியோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடங்கியது என்பது தெரிந்ததே. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது என்பதும், இன்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார் என்பதும் டாம் சிப்லே 87 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் ரன் எடுக்க ஓடிய போது திடீரென காலில் காயம் ஏற்பட்டு துடித்தபடி கீழே விழுந்தார். அப்போது அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி உடனடியாக ஓடி வந்து அவருக்கு முதல் உதவி செய்தார்.

வலியால் ஜோரூட் துடிதுடித்த போது மருத்துவர்கள் வரும்வரை இருக்காமல் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்த விராத் கோலியின் மனிதாபிமானத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இது குறித்த வீடியோவை ஐசிசி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது என்பதும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

அடித்தது ஜாக்பாட்: ஆர்யா சகோதரிக்கு எத்தனை கோடி பரிசு தெரியுமா?

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக 32 கோடி லாட்டரி சீட்டு பரிசு கிடைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு: மீண்டும் பாலாவுடன் இணைந்த ஷிவானி?

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்த ஷிவானி நாராயணன் அவரது கைக்குள் இருந்ததால்தான் தனது தனித்தன்மையை இழந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டார்

திருமணமான ஒருசில மாதங்களில் கணவரை பிரிந்த தமிழ் நடிகை!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் திருமணமான ஒரு சில மாதங்களில் கணவரை விவாகரத்து செய்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 ஆண்டுகள் கழித்து ஷரபோவாவிடம் மன்னிப்பு கோரும் இந்திய டுவிட்டர் ரசிகர்கள்!

ஐந்து ஆண்டுகள் கழித்து பிரபல டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவிடம் இந்திய டுவிட்டர் ரசிகர்கள் மன்னிப்பு கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2½ கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள்… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னை விமான நிலையத்தில் 2½ கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.