close
Choose your channels

மக்கள் நல பணியில் களமிறங்கிய விஷாலின் மக்கள் நல இயக்கம்..!

Tuesday, May 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னியாகுமரி மாவட்டம் புரட்சித் தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் குலசேகரன் புதூர் பகுதியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழம் வழங்கப்பட்டது.

மேலும் மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் அசோக் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

வரும் 2026 ஆம் ஆண்டு விஷால் நேரடி அரசியலில் குதிக்க போவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில் அதற்கு முன்னோட்டமாக தற்போது மக்கள் நல பணிகளை விஷாலின் மக்கள் நல இயக்கம் தொடங்கி உள்ளதாக கருதப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment