தயாரிப்பாளர் சங்கத்தில் 9 பேர் நியமனம்: விஷால் தரப்பின் அதிரடி நடவடிக்கை!

  • IndiaGlitz, [Thursday,May 09 2019]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தமிழக அரசு தனி அதிகாரி என்.சேகர் என்பவரை நியமனம் செய்து, இனிமேல் தயாரிப்பாளர் சங்கம் குறித்த முடிவுகளை அவரே எடுப்பார் என அறிவித்தது.

இந்த நிலையில் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையின்போது இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் நேற்று தனி அதிகாரி என்.சேகர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு என ஒன்பது பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். இந்த குழுவில் பாரதிராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட சங்க தனி அதிகாரிக்கு உதவியாக பாரதிராஜா, எஸ்வி சேகர் உள்பட 9 பேர் கொண்ட குழு நியமனத்தை எதிர்த்து சங்க செயலாளர் கதிரேசன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்த்தனி அதிகாரி நியமனத்துக்கு எதிராக வழக்கு உள்ளபோது தற்காலிக குழுவை நியமிக்க தனி அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என்று அந்த முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

More News

கார்த்தியின் 'கைதி' படம் குறித்த முக்கிய தகவல்!

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததை அடுத்து அவர் தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சுப்பிரமணியன் சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன்: பிரபல நடிகை

அரசியலை சுப்பிரமணியன் சுவாமியிடம் இருந்து கற்க விரும்புவதாக பிரபல நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

கமல் பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் உறுப்பினரின் மனைவி எதிர்ப்பு

திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை

காலிங் பெல் அடித்த நபரை பாய்ந்து வந்து கடித்த பாம்பு!

நண்பரின் வீட்டுக்கு சென்ற ஒரு நபர் வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது திடீரென ஒரு பாம்பு பாய்ந்து வந்து கடித்த சம்பவம் அமெரிக்காவில் ஒக்லஹாமா என்ற பகுதியில் நடந்துள்ளது

காருடன் சேர்த்து குழந்தையை எரித்து கொன்ற தந்தை! மனைவியை பழிவாங்க அரங்கேறிய கொடூரம்!

விவாகரத்தான தம்பதியினருக்கு இடையே குழந்தையை யார் வளர்ப்பது என நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில்,  பெற்ற குழந்தை என்றும் பாராமல், தந்தை காருடன் எரித்து கொலைசெய்த சம்பவம்