close
Choose your channels

தயாரிப்பாளர் சங்கத்தில் 9 பேர் நியமனம்: விஷால் தரப்பின் அதிரடி நடவடிக்கை!

Thursday, May 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தமிழக அரசு தனி அதிகாரி என்.சேகர் என்பவரை நியமனம் செய்து, இனிமேல் தயாரிப்பாளர் சங்கம் குறித்த முடிவுகளை அவரே எடுப்பார் என அறிவித்தது.

இந்த நிலையில் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையின்போது இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் நேற்று தனி அதிகாரி என்.சேகர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு என ஒன்பது பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். இந்த குழுவில் பாரதிராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட சங்க தனி அதிகாரிக்கு உதவியாக பாரதிராஜா, எஸ்வி சேகர் உள்பட 9 பேர் கொண்ட குழு நியமனத்தை எதிர்த்து சங்க செயலாளர் கதிரேசன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்த்தனி அதிகாரி நியமனத்துக்கு எதிராக வழக்கு உள்ளபோது தற்காலிக குழுவை நியமிக்க தனி அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என்று அந்த முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.