விஷால்-லைகா நிறுவனம் இடையிலான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Saturday,March 12 2022]

விஷால் மற்றும் லைக்கா நிறுவனம் இடையிலான வழக்கில் இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

நடிகர் விஷால் தனது நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்காக அன்புசெழியனிடம் வாங்கிய கடனை லைக்கா நிறுவனத்திடம் செலுத்துமாறு கோரியதாகவும், அந்த கடனை லைக்கா நிறுவனம் செலுத்தியதியதாகவும் தெரிகிறது.

இந்த பணத்தை லைக்கா நிறுவனத்திற்கு விஷால் திருப்பிக் கொடுக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடன் தொகையை செலுத்தாமல் ’வீரமே வாகை சூடும்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் முடிவில் மூன்று வாரங்களில் ரூபாய் 15 கோடி நிரந்தர வைப்புநிதியாக நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று வாரங்களில் இந்த தொகையை செலுத்தியதற்கான ரசீதை சமர்ப்பிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

More News

சமந்தாவின் பச்சை காஸ்ட்யூமின் விலை இத்தனை லட்சமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

கருப்பு மற்றும் பச்சை காஸ்டியூம் அணிந்த சமந்தாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதை பார்த்தோம்.

10ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய விஜய் ஹீரோயின்: வைரல் புகைப்படங்கள்!

தளபதி விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனது பத்தாவது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

'எதற்கும் துணிந்தவன்' படக்குழு மீது போலீஸ் புகார்: என்ன காரணம்?

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.

இயக்குநர் மிஷ்கின் தொடங்கி வைத்த பிரபுதேவா படம்!

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'ரேக்ளா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது

'உண்மையை அப்புறம் சொல்றேன்': 'மாறன்' இயக்குனரின் சர்ச்சை பதிவு!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான 'மாறன்' திரைப்படம் நேற்று மாலை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.