விஷாலின் வேலைநிறுத்த போராடத்திற்கு முழு ஒத்துழைப்பு கிடைக்குமா?

  • IndiaGlitz, [Friday,May 12 2017]

நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகளுக்கு வைத்த கோரிக்கை கவனிக்கப்படாமல் இருப்பதால் வரும் ஜூன் 1 முதல் திரையுலகினர்களின் ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இம்மாத இறுதி வாரத்தில் யாரும் திரைப்படங்களை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று விஷால் கேட்டுக்கொண்டார். எனவே வரும் 19ஆம் தேதி வரும் வெள்ளியை அடுத்து திரைப்படங்கள் வெளிவராது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மே 26ஆம் தேதி சமுத்திரக்கனியின் 'தொண்டன்' மற்றும் அருள்நிதியின் 'பிருந்தாவனம்' ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் விஷாலின் வேலை நிறுத்தத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டனர். கோடை விடுமுறையில் பொதுமக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு புதியதாக வெளிவரும் திரைப்படங்களை பார்ப்பதுதான். இந்த நேரத்தில் திரையரங்குகளை மூட சொல்வது முட்டாள்தனம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே விஷாலின் வேலைநிறுத்த அறிவிப்புக்கு திரையுலகினர்களின் முழு ஆதரவு கிடைக்குமா? என்பது சந்தேகமே என்று கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.

More News

'அவதார்' சாதனை முறியடிகும் நாள் நெருங்கிவிட்டதா? தமிழ் சினிமாவில் பரபரப்பு

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த 28ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கிடைத்த உற்சாகம்

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடித்த 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் இன்று வெளியாகவுள்ளது.

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 92.1%

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இந்த முடிவின்படி தேர்வு எழுதிய 92.1 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டார் நீதிபதி கர்ணன்

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்து ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க சுப்ரீ கோர்ட் நேற்று முன் தினம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிபதி கர்ணன் தலைமறைவானதாக கூறப்பட்டது.