ரஜினிக்காக குரல் கொடுத்த விஷால்

  • IndiaGlitz, [Thursday,May 31 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 'காலா' படத்திற்கு தடை விதிக்கப்பட்டதற்கு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்று வெளியான செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்து இன்று அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது:

ரஜினி சார் நடித்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது, தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள். கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம். இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது நாளை காலை முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு அரசியல் வேறு. காலா படம் ஒரு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டு அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கிறார். இது திரைப்படம்.அவர் அரசியலுக்கு வருவது வேறு. 

நாளை காலை பிலிம் சேம்பர் என்ன முடிவு எடுப்பார்கள் என தெரியவில்லை. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இது தொடர்பாக சந்திப்போம். காலா படம் எல்லா இடங்களிலும் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். காவிரி பிரச்சனை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் பேசியுள்ளோம். அது எங்களுடைய தனிப்பட்ட கருத்து. அது ஒரு படத்தை பாதிக்க கூடாது. சினிமாவையும், அரசியலையும் ஒன்று சேர்க்க கூடாது என்பதே எங்கள் நோக்கம். ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி கருத்து இருக்கும். என்னை பார்த்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால் நான் ஒரு பதில் சொல்வேன், மற்ற நடிகர்கள் ஒரு பதில் சொல்வார்கள். 

ஐ.பி.எல் விளையாட்டின் போது ஏற்பட்ட பிரச்சனை பற்றி நீங்கள் பாரதிராஜா சார் கிட்டதான் கேட்கவேண்டும். ரஜினி சார் அரசியல் வருவது தவறு கிடையாது. புது முகங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் ரஜினி சார் வருகிறார். படம் வெளிவரும் போது அதையும் அரசியலையும் ஒன்று சேர்ப்பது தவறு. நாம் அனைவரும் இந்தியர்களே. மாநிலங்கள் ஒரு எல்லை கோடு அவ்வளவுதான். 

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தது அதில் பதிமூன்று பேர் இறந்துள்ளார்கள் கணக்கில் வராதவர்கள் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என எனக்கும் தெரியும்/ நானும் ஓட்டு போட்டவன் தான். யார் சுட சொன்னது என்று கேட்டதற்கு டெப்டி தாசில்தார் என்று சொல்கிறார்கள். எஸ்.பி, கலெக்டரையும் இடமாற்றம் செய்துவிட்டார்கள். இதில் முக்கியமான விஷியம் என்னவென்றால் கணக்கில் வந்த பதிமூன்று பேர் இறந்ததற்கு அந்த ஆலை மூடப்பட்டுவிட்டது. இறந்தவர்கள் பெயர் வரலாற்றில் எழுத வேண்டும். 144 தடை போட்டால் முட்டிக்கு கீழே தான் சுட வேண்டும் அது எல்லாருக்குமே தெரிந்தது. மக்களுக்கு தேவையான சில விஷயம் ஜல்லிகட்டு பிரச்சனையா இருக்கட்டும் நெடுவாசல், ஸ்டெர்லைட் பிரச்சனையா இருக்கட்டும் அவர்களுக்கு தேவையானதை கொடுப்பதே உணர்வுபூர்வமான விஷயமாக இருக்கும். இரவில் நாலு பேர் கூடினாலே போலீஸ் வந்து கேட்பார்கள். இது இலட்சகணக்கான பேர் கூடியும் தெரியவில்லை என்று கூறுவது முட்டாள்தனம்.

பிரதமர் வெளிநாடு போகாமல் உள்நாட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தாலே சந்தோஷம் தான். தமிழ் சினிமாவுக்காகவும் நாங்களும் போராடிட்டு தான் இருக்கிறோம். பிரதமரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். உள்நாட்டு பிரச்சனைகளை கவனியுங்கள். நல்லது செய்தால் நான் அவருக்கு தானே ஓட்டு போடுவேன், நல்லது செய்யாமல் எப்படி ஓட்டு போட முடியும். பதிமூன்று பேர் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு தொகையை நாங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். பதிமூன்று போராளிகளின் குடும்பத்திற்கும் பெரிய இழப்பு தான் அவர்களை மறக்க கூடாது. பாரத பிரதமரை வாக்களித்தவனாக வேண்டி கேட்டுகொள்கிறேன்  நம் நாட்டு பிரச்சனையை கவனியுங்கள்.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

More News

ரஜினியை தேச துரோக சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: சரத்குமார் ஆவேசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு பண உதவியும் செய்தார்.

அடல்ட் காமெடி பட இயக்குனரின் முதல் 'யூ' படம்

'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு 'ஏ' சான்றிதழ் அடல்ட் காமெடி படங்களை இயக்கி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நடிகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகம் அடுத்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது

தமிழ்நாடு சுடுகாடாகும்: பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் ஆவேசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அதன்பின்னர் பேட்டியளித்தார்.

'காலா'வுக்கு எதிராக போராட்டம்: டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன்  7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு கர்நாடக மாநில திரைப்பட வர்த்தக சங்கம் தடை விதித்துள்ளது.