முருகதாஸ் 'நீட்' சப்ஜெட்டையும் தொட்டுருவார்னு நினைக்கிறேன்: விஷால்

  • IndiaGlitz, [Sunday,September 10 2017]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ் படமான 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரபல தமிழ் நடிகர்களின் விழா போன்று பிரமாண்டமாக நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னணி நடிகர்கள் அனைவருமே மகேஷ்பாபுவை தமிழ் இண்டஸ்ட்ரிக்கு வரவேற்பதாகவும், அவரை நிச்சயம் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கூறினர்.

இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால், 'ஏ.ஆர்.முருகதாஸ் மிகச்சிறந்த இயக்குனர். ரமணா முதல் கத்தி வரை சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை அழகாக படம் ஆக்கியவர். தயவு செஞ்சு மீண்டும் பாலிவுட்டுக்கு போகாதீங்க.. தற்போது நிலவும் பிரச்னை குறித்து படம் எடுங்க... நீங்க அதை ஏற்கெனவே ஐடியா பண்ணிருப்பீங்க என்று கூறினார்

அப்போது இடைமறித்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சதீஷ், 'அவர் என்ன படம் எடுக்க வேண்டும் என்று 'நீட்'டா சொல்லுங்க என்று கூற, 'அவர் அந்த சப்ஜெட்டையும் தொட்டுருவார்ன்னு நினைக்கின்றேன், அதுமட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கு 'நீட்' வேண்டும் என்பதையும் சொல்லி கொடுப்பார்' என்று கூறினார். 

தற்போது கொளுந்துவிட்டு எரியும் நீட் பிரச்சனை குறித்து முருகதாஸ் கண்டிப்பாக படம் எடுப்பார் என்று ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நம்பிக்கை தெரிவித்தனர்.

More News

'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை. கமல்ஹாசனின் புதிய டுவீட்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது டுவிட்டரில் சமூக கருத்துக்களை தைரியமாக கூறி வரும் நிலையில்

ராம்ரஹிம் அறையில் உள்ள சுரங்கப்பாதை எங்கே செல்கிறது? திடுக்கிடும் தகவல்

சமீபத்தில் பெண் சீடர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டு உறுதியானதால் சாமியார் ராம்ரஹீம் சிங் அவர்களுக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது என்பது தெரிந்ததே.

'விக்ரம் வேதா' படத்துடன் கனெக்சன் ஆகும் சூர்யா-சுதா படம்

நடிகர் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்ப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா இயக்கவுள்ளார்

சுஜா இன்று வெளியேறுகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பல புரமோக்கள் திசை திருப்பும் வகையில் இருக்கும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவரை புரமோ வீடியோவில் பில்டப் மட்டுமே அதிகமாக வெளிவந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடாராஜன் வீட்டில் சிபிஐ ரெய்டு

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.