மத்திய அரசுக்கு நன்றி, மாநில அரசின் அறிவிப்பை எதிர்பார்க்கின்றோம்: விஷால்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு இல்லாமல் இருந்த நிலையில் மத்திய அரசு நேற்று திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது என்பதும் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்து இருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு தமிழ் திரையுலகினர் உள்பட இந்திய திரையுலகினர் அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் நடிகர் சங்க செயலாளரும் முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் பிரபல நடிகருமான விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

‘மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனையடுத்து மத்திய அரசு வழிகாட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து படக்குழுவினரும் படப்பிடிப்பை விரைவில் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். மேலும் படப்பிடிப்பை எப்பொழுது முதல் தொடங்கலாம் என்ற தேதியை விரைவில் தமிழக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துவிட்டதை அடுத்து மாநில அரசும் அனுமதி அளித்து விட்ட பின்னர் விஷாலின் ’துப்பறிவாளன் 2’ உள்பட அனைத்து தமிழ் திரைப் படங்களின் படப்பிடிப்புகளும் தொடங்கும் என்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சாந்தனுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினாரா விஜய் மகள்?

பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் அவர்களின் மகனும் நடிகருமான சாந்தனு நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். முதல் முதலாக நடிகர் சாந்தனுவுக்கு

தமிழ் நடிகையின் தந்தை-பழம்பெரும் இயக்குனர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் பல திரைப்படங்களில் நாயகியாகவும், தற்போது குணசித்திர நடிகையாகவும் நடித்து வருபவர் சரண்யா.

திரைப்படங்களில் நிறைவேறாதது, வெப்சீரிஸில் நிறைவேறியது: சமந்தா பரபரப்பு பேட்டி 

திருமணத்துக்கு பின்னர் பொதுவாக நடிகைகளின் மார்க்கெட் தலைகீழாக கவிழ்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் பல வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து

மனோரமா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கணும்: இளம் நடிகையின் ஆசை

தமிழ் திரை உலகின் சகாப்தம் ஆச்சி மனோரமா என்றால் அது மிகையாகாது. 1000 படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த அவரது சாதனையை வேறு ஒரு நடிகையை முறியடிக்க முடியுமா

மொபைல் போன் சிக்னலுக்காக மலை உச்சியில் தங்கைக்கு குடிசை போட்டுக் கொடுத்த அண்ணன்!

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருப்பதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன.