close
Choose your channels

தமிழ் நடிகையின் தந்தை-பழம்பெரும் இயக்குனர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

Monday, August 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் பல திரைப்படங்களில் நாயகியாகவும், தற்போது குணசித்திர நடிகையாகவும் நடித்து வருபவர் சரண்யா. இவர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்துள்ளார் என்பதும் இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரண்யாவின் தந்தையும் பிரபல மலையாள இயக்குனருமான ஏ.பி.ராஜ் என்பவர் காலமானார். அவருக்கு வயது 95. ‘துள்ளி ஓடும் புள்ளிமான்’, ’கை நிறைய காசு’ ஆகிய தமிழ் படங்களையும் சுமார் 50க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களையும் இயக்கியவர் ஏ.பி ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிங்கள மொழியிலும் திரைப்படங்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் மலையாள இயக்குனர் ஏபி ராஜ் காலமானதை அடுத்து மலையாள திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.