close
Choose your channels

இன்னிக்கு வந்தவன் நேத்து வந்திருந்தா பெட்டியை எடுத்துட்டு கிளம்பியிருப்பேனே.. விஷ்ணு புலம்பல்..!

Friday, January 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் வீட்டிற்கு ’சின்ன மருமகள்’ சீரியலின் ஹீரோ மற்றும் ஹீரோயின் வந்த நிலையில் அவர்கள் சொன்னதை கேட்டு ’இன்னிக்கு வந்தவர்கள் நேற்று வந்திருந்தால் நான் பணப்பெட்டியை எடுத்து கிளம்பி இருப்பேனே’ என்று விஷ்ணு ஜாலியாக பேசும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய இருக்கும் நிலையில் கடைசி கட்டத்தில் பூர்ணிமா 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். இந்த நிலையில் இன்று விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ’சின்ன மருமகள்’ சீரியலின் ஹீரோ மற்றும் ஹீரோயின் வருகை தந்தனர்.

அதில் ஹீரோ ’உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னு இருக்கு, ஆனால் கேட்கக்கூடாது என்று சொல்லிட்டாங்க’ என்று விஷ்ணுவுடன் கூறுகிறார். உடனே விஷ்ணு ’யார்ரா இவங்க, நான் ஒரு கோடு போட்டு அதுல விளையாடிக்கிட்டு இருக்கேன், இவனுக்கு வந்து என்னை சுத்தமா குழப்பிட்டாங்க, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு சொல்றாங்க, ஆனா சொல்ல மாட்டேங்கிறாங்க, இன்னைக்கு வந்த இவங்க, நேத்து வந்திருந்தால், நான் பணப்பெட்டியை எடுத்து கிளம்பி இருப்பேன்’ என்று ஜாலியாக சொல்ல, சுற்றி இருக்கும் சக போட்டியாளர்கள் சிரிக்கின்றனர்.

விஷ்ணு ஜாலியாக இதை சொன்னாலும் பணப்பெட்டியை மிஸ் செய்து விட்டோமோ என்று எண்ணம் அவர் மனதில் தோன்றியுள்ளதாக அவருடைய பேச்சிலிருந்து தெரிகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இன்னொரு புதிய சீரியலான ’தங்கமகள்’ சீரியலின் ஹீரோ மற்றும் ஹீரோயின் தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் இருவரும் விஷ்ணுவை என்ன மாதிரியாக குழப்பப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.