close
Choose your channels

நான் வேணும்னா போய்விடட்டுமா சார்.. ஒரு கேம் கூட ஆட விடமாட்றாங்க சார்.. புலம்பும் போட்டியாளர்..!

Wednesday, December 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது, ஒவ்வொருத்தரும் குரூப் சேர்ந்து கொண்டு இன்னொரு குரூப்பில் உள்ளவர்களை எலிமினேட் செய்து வருகின்றனர்.

ஒரு பக்கம் மாயா, பூர்ணிமா, நிக்சன், விஜய் மற்றும் விசித்ரா ஒரு குரூப்பாகவும் இன்னொரு பக்கம் மணி, ரவீனா, விஷ்ணு மற்றும் தினேஷ் ஆகியோர்களும் உள்ளனர். இந்த இரண்டு குரூப்புகளிலும் சேராமல் இருப்பது அர்ச்சனா மட்டுமே, அவர் மட்டுமே தனித்தன்மையுடன் விளையாடி வருவதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டாஸ்க்கில் எலிமினேஷன் செய்யப்பட்டது குறித்து விஷ்ணு கூறும்போது, ‘ரவீனாவுக்கு பாய்ன்டே கிடையாது, மாயாவுக்கு அதிக பாயிண்ட் உள்ளது எனவே மாயாவை எலிமினேட் பண்ணி இருக்கலாம் என்று கூறுகிறார்.

இதுகுறித்து மாயா கூறியபோது, பழைய கேமோட கோபத்தை எல்லாம் மனசுல வச்சிருக்காங்க, அவங்க பக்கத்துல நிக்க கூட முடியல என்னால என்று கூறுகிறார்.

என்னால போன கேம் தான் விளையாட முடியல, இந்த கேமாவது விளையாட விடுங்க என்று கேட்டேன் ஆனாலும் என்னை விளையாட விடவில்லை என்று தினேஷ் ஒரு பக்கம் புலம்புகிறார்.

அப்போது ரவீனா ’நான் வேணா போகட்டுமா சார், ஒரு கேம் கூட விளையாட விடமாட்றாங்க சார் என்று ரவீனா கூற, ‘ நீ எலிமினேஷனுக்கு இதுவரைக்கும் போகவே இல்லை, இப்ப போ என்று நிக்சன் கூற, ’நீ நல்லா யோசிக்கிறாடா’ என்று ரவீனா கூறுவதுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவுக்கு வந்தது.

மொத்தத்தில் இந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் போட்டியாளர்கள் மத்தியில் ஒரு பிரிவினையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.