தரக்குறைவாக விமர்சனம் செய்த நபருக்கு பதிலடி கொடுத்த விஷ்ணுவிஷாலின் கேர்ள் பிரண்ட்

நடிகர் விஷ்ணுவிஷாலின் கேர்ள் பிரண்ட் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பது தெரிந்ததே. இருவரும் பரஸ்பரம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பது உள்பட இருவரும் இணைந்த பல புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவரின் தரக்குறைவான விமர்சனத்திற்கு ஜூவாலா கட்டா பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் தெய்வம் ஒன்றின் கையில் இருக்கும் கொடியில் சானிடரி நாப்கின் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஜூவாலா, ‘பீரியட்ஸ் ஆர் கூல்’ என்று பதிவு செய்திருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்த ஒருவர், ஜூவாலாவின் தாயார் குறித்து அச்சில் வெளியிட முடியாத தரக்குறைவான ஒரு கருத்தை பதிவுசெய்திருந்தார். இதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஜூவாலா, ‘இவர் போன்ற நபர்கள் சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். ஆன்லைனில் இவ்வளவு வன்முறையாக இருக்கும் இவர் போன்றவர்கள் ஆஃப்லைனிலும் பயங்கரமானவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜூவாலா கட்டாவின் இந்த தைரியமான கருத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதோடு, அவருக்கு ஆதரவாக பல்வேறு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது

More News

பீட்டர்பால் பிறந்த நாள்: லாக்டவுன் நேரத்தில் காரில் பார்ட்டி வைத்த வனிதா

ஒருபக்கம் வனிதாவின் திருமணம் குறித்த சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வனிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்

சிலம்பம் சுற்றி அசத்தும் மூதாட்டி: சிலம்ப பயிற்சி பள்ளி அமைக்க பிரபல நடிகர் ஆலோசனை

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தெருவில் சிலம்பு சுற்றி வித்தை காட்டிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

ரஜினிக்கு ரூ.100 அபராதம் விதித்த காவல்துறையினர்: என்ன காரணம்?

கடந்த இரண்டு மூன்று நாட்களாக ரஜினிகாந்த் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே .சமீபத்தில் ரஜினிகாந்த் தனது மகள் குடும்பத்துடன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்கார் விருது வென்ற நடிகர்-இயக்குனர் 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கொரோனாவுக்கு பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறித்தும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்

மலைகிராம பெண்ணின் போலீஸ் கனவை நிறைவேற்ற முன்வந்த எஸ்பி!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் தொகுதியில் உள்ள ஒரு மலை கிராமம் பாலமலை.