விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Thursday,January 30 2020]

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ’எப்.ஐ.ஆர். என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

’திருடன் போலீஸ்’, உள்குத்து’ உள்பட ஒரு சில படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படத்தில் ரெஜினா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்தில் ரெஜினா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் திடீரென தற்போது விஷ்ணு விஷால் இணைந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. விஷ்ணு விஷால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாரா? அல்லது நாயகனாக நடித்துள்ளாரா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தை ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் கிஷோர், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

More News

வட்டிக்கு கடன் கொடுத்தேன்.. ஆனால் அது தொழில் கிடையாது..! வருமான வரித்துறையினரிடம் ரஜினிகாந்த் பதில்.

2002-03-ம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், இதற்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி பெற்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020  - 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது கொரோனா வைரஸ்..! 6000 பேர் பாதிப்பு.

கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 170-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கிட்டத்தட்ட 6,000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசனின் இரண்டு பரபரப்பான டுவிட்டுக்கள்!

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகம், அரசியல் என இரண்டிலும் பிசியாக இருந்து கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை ஆக்ரோஷமாக தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே

ராதாரவியுடன் நேருக்கு நேர் மோத முடிவு செய்த சின்மயி! பெரும் பரபரப்பு

டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தல் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.