விஷ்ணு-ரெஜினா படத்தின் வித்தியாசமான டைட்டில்

  • IndiaGlitz, [Tuesday,April 11 2017]

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். கடந்த ஆண்டு விஷ்ணு நடிப்பில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' மற்றும் 'மாவீரன் கிட்டு' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் தற்போது 'கதாநாயகன்', 'சிண்ட்ரெல்லா' மற்றும் 'பொன் ஒன்று கண்டேன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் செல்லா இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதுவரை டைட்டில் வைக்கப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்ற இந்த படத்திற்கு தற்போது 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டைட்டில் குறித்த அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும், என்று தெரிகிறது.

விஷ்ணு, ரெஜினா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நடிகை ஓவியா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் லிவிங்ஸ்டன், சிங்கமுத்து, கருணாகர்ன், யோகிபாபு, ஆன்ந்த்ராஜ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். விஷ்ணுவின் சொந்த தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு லியான் ஜேம்ஸ் இசையமைக்கின்றார்

More News

பாரதிராஜாவுக்காக மீண்டும் இணையும் கமல்-ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் ஒரு குரு என்றால் இவர்களுக்கு இன்னொரு குருவாக திகழ்ந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா,.

விளம்பரத்தில் நடிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். ராஜ்கிரண்

திரையுலகில் நடித்து கொண்டிருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் விளம்பரப்படத்திலும் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் ஜெயலலிதாவுடன் நடித்த நடிகை

கனவுத்தொழிற்சாலையான திரையுலகில் பகட்டான வாழ்க்கை, பலகோடி சொத்துக்களுடன் வாழும் நட்சத்திரங்கள் ஒருசிலர் இருந்தாலும், இதே திரையுலகில்தான் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்படும் தொழிலாளர்களும் உள்ளனர்

டெல்லியில் மண்சோறு சாப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த்

தமிழக விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக டெல்லியில் வங்கிக்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாளை நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் தேர்தல் அதிகளவிலான பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.