கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ!

  • IndiaGlitz, [Saturday,August 08 2020]

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கேரள ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் வரும் காலங்களில் கதையை தேர்வு செய்வேன் என்று கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் இளம் ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் நடித்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ’ராட்சசன்’ உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் ‘எம்.ஜி.ஆர் கார்டன்’, ‘மோகன் தாஸ்’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று மலையாள சேனல் ஒன்றில் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்த ’ராட்சசன்’ திரைப்படம் ஒளிபரப்பானது. மலையாளத்தில் டப் செய்யப்பட்டு ரிலீசான இந்த திரைப்படத்திற்கு கேரள ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த ஹேஷ்டேக் டிரண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மகிழ்ச்சி அடைந்த விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ’என் மீது இவ்வளவு அன்பும் ஆதரவும் காட்டும் கேரள ரசிகர்களுக்கு எனது நன்றி. இனி வரும் காலங்களில் கேரள ரசிகர்களும் ரசித்து பார்க்கும் வகையில் உள்ள கதைகளையே தேர்வு செய்வேன். தற்போது நான் நடித்து வரும் திரைப்படங்களும் அவ்வாறான கதையம்சம் கொண்டவை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து கேரள ரசிகர்கள் விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More News

கமல் பாடலை ரிலீஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்!

உலகநாயகன் கமலஹாசன், அமலா நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய திரைப்படம் 'சத்யா'.

லெபனான் வெடிவிபத்து ராக்கெட் வீசியதால் ஏற்பட்டு இருக்கலாம்… பகீர் தகவலை வெளியிட்ட அந்நாட்டின் அதிபர்!!!

கடந்த செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 5) லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் அருகேயுள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட ஒரு வெடிவிபத்தால் இதுவரை 157 பேர் உயிழந்துள்ளனர்.

ஊரடங்கு நேரத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி: பரபரப்பு தகவல்

கொரானா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு காலத்தில் நடிகர் நடிகையர் படப்பிடிப்பு இல்லாமல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருக்கு நிச்சயதார்த்தம்: வைரலாகும் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரும் ஐபிஎல் பெங்களூரு ராயல் சேலஞ்ச் கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான யுஜ்வேந்திர சாஹல் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம்

கேரளா-இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு!!! இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியிலுள்ள ராஜமாலா நேமக்கடவூர் அடுத்த பெட்டிமாடா பகுதியில் கடந்த 2 தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.