சின்னத்திரை சித்ரா கணவர் ஹேமந்த் மீண்டும் கைது: என்ன காரணம்?

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சித்ராவின் மரணம் குறித்து ஆர்டிஓ மற்றும் காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேமந்த் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ இடம் வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹேமந்த் மீது புகார் எழுந்துள்ள நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஹேமந்த்தை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே சித்ரா தற்கொலை வழக்கில் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் முறையாக கைது செய்யப்பட்டு இருப்பதால் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

தஞ்சை தரணியில் பிறந்த ராப் பாடகி ஐக்கிபெர்ரி!

தென்னிந்தியாவின் முதல் பெண் ராப் பாடகர் மற்றும் காஸ்மெட்டிக் சர்ஜனான ஐக்கிபெர்ரியின் தமிழ் ராப் பாடல்கள் உலக அளவில் பிரபலமாகியுள்ள நிலையில் அவர் தனது டாக்டர் தொழில் மற்றும் ராப் பாடல் குறித்து

இறப்புச் சடங்கில் ஏற்பட்ட மற்றொரு பயங்கரம்… 23 பேர் பரிதாப பலி!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு இறப்புச் சடங்கின்போது மயானக்கூரை இடிந்து விழுந்து 23 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

'மாஸ்டர்', 'ஈஸ்வரனை அடுத்து பொங்கல் விருந்தில் இணையும் தனுஷ் படம்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்'திரைப்படம் வரும் 13ம் தேதியும், சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதியும் பொங்கல் விருந்தாக வெளிவர உள்ளது என்பதும்

ஒரே வாகனத்தில் வாக்குசேகரிக்கும் ஓபிஎஸ்… இபிஎஸ்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா???

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் அதிகமுக தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்தியாவில் அச்சுறுத்தலாக மாறிவரும் புதிய தொற்றுநோய்… மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா???

கொரோனாவிற்கு நடுவில் இந்தியாவில் புதிய தொற்று நோய் ஒன்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.