மேடமி டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபல பாடகியின் மெழுகு சிலை

  • IndiaGlitz, [Thursday,March 16 2017]

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடமி டுஸாட்ஸ்' என்ற அருங்காட்சியகத்தில் உலகப்புகழ் பெற்றவர்களின் மெழுகு உருவச்சிலை நிறுவப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்திய பிரதமர் மோடி , அமிதாப்பச்சன் உள்பட பலருடைய மெழுகுசிலை இங்கு உள்ளது. லண்டன் மட்டுமின்றி உலகின் முன்னணி நகரங்களிலும் இதன் கிளைகள் உள்ளன.

இந்நிலையில் விரைவில் இந்திய தலைநகர் டெல்லியில் மேடமி டுஸாட்ஸ்' கிளை நிறுவப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் பிரபலங்கள் மெழுகுசில்லை காட்சிக்காக வைக்கப்படும்.

இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் அவர்களின் மெழுகுசிலை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறும் சிலைகளில் முதல் இந்திய பாடகி ஷ்ரேயாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஷ்ரேயா கூறியபோது, 'உலக தலைவர்கள், கலைஞர்கள், வரலாற்று அறிஞர்களின் சிலை அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் எனது சிலையும் இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாடகியாக இருந்து வரும் ஷ்ரேயா கோஷல், தமிழ், இந்தி, பெங்காளி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி போன்ற பல மொழிகளில் ஏராளமான திரைப்பட பாடல்களை பாடியவர். மேலும் ஷ்ரேயா நான்கு தேசிய விருதுகளையும், பத்து ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 61' படக்குழுவினர்களின் அன்பு வேண்டுகோள்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'விஜய் 61' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் 'மூன்று முகம்' என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது...

பெண் சாதனையாளர் விருது கொடுத்த அமைப்பிடம் நயன்தாரா மன்னிப்பு கேட்டது ஏன்?

சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் ரெயின் டிராப்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சாதனை செய்த பெண்களுக்கு 'பெண் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த ஆண்டின் இந்த விருதுக்கு கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன் பிரபல இயக்குனர் வைத்த கோரிக்கை

'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை' உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சீனுராமசாமி சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமியிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் வைத்துள்ள கோரிக்கையின் விபரம் பின்வருமாறு:

பாடகி சுசித்ரா எங்கே?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் கோலிவுட் பிரபலங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகின. ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பக்கத்தில் வெளியான வீடியோவினால் கோலிவுட் திரையுலகில் இதுவரை ஏற்படாத பரபரப்பு ஏற்பட்டது...

ரஜினியால் தூக்கத்தை தொலைத்த 'மாநகரம்' இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகிற்கு புதியதாக வரும் திறமைசாலிகளை பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாதவர்.