எத்தனை ரஜினி வந்தாலும் எங்களை அசைக்க முடியாது: தமிழக அமைச்சர்

ஒரு ரஜினிகாந்த் அல்ல எத்தனை ரஜினிகாந்த் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

நடிகர் ரஜினியை பார்த்து இன்றைய அரசியல் தலைவர்கள் பயப்படுகின்றனர் என்றும் இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகள் யாருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்பதால் ரஜினி சொல்வது மக்களிடம் போய் சேர்ந்து விடுமோ என்று பயப்படுவதாக சற்று முன்னர் பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா கூறியிருந்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’எங்களுக்கு ரஜினியை பார்த்து எல்லாம் பயம் கிடையாது. திமுகவுக்கு வேண்டுமானால் அந்த பயம் இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

மேலும் ஒரு ரஜினி அல்ல எத்தனை ரஜினி வந்தாலும் எங்களுக்கு எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்றும் எங்களுடைய வரலாறு அப்படி இருக்கிறது என்றும் அடக்குமுறையை எதிர்த்து தோற்றுவிக்கப்பட்டது தான் அதிமுக என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஒரேநாளில் ரஜினியை பார்த்து பயப்படுவதாக ஒரு அரசியல்வாதியும் ரஜினியை பார்த்து எந்த பயமும் இல்லை என்று இன்னொரு அரசியல்வாதி கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

டெங்கு கொசுக்களை ஒழிக்க செயற்கை கொசுக்கள்  உருவாக்கம்

கலிபோர்னிய சான் டியாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தற்போது செயற்கையாக ஒரு புதிய வகை கொசுக்களை உருவாக்கியுள்ளனர்.

ரஜினியை கண்டு அரசியல் கட்சியினர் பயப்படுகின்றனர்: சர்கார் பட நடிகர் கருத்து

ரஜினிகாந்த் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினாலும், பேட்டி அளித்தாலும் அவரது கருத்துக்கு எதிர் கருத்து கூறுவதை கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு – அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவியது

சீனாவில் ஒரு வகையான நிமோனியாவை பரப்பும் கொரோனா வகையைச் சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்: பிரபல இயக்குனரின் பரபரப்பு டுவீட்

கோலிவுட் திரையுலகில் 'சிவா மனசுல சக்தி, 'பாஸ் என்ற பாஸ்கரன்' உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கியவர் எம் ராஜேஷ். இவர் இயக்கிய படங்களில் ஹீரோவுக்கு

ரஜினி விவகாரம் குறித்து கமல் கட்சி பதிவு செய்த டுவீட்?

ரஜினிகாந்த்-பெரியார் விவகாரம் கடந்த ஒரு வாரமாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது தெரிந்ததே. குறிப்பாக நேற்று ரஜினிகாந்த்