அவமானத்தில் அனைவரும் தலையை தொங்கவிட வேண்டும்: விஜய் நாயகி ஆவேசம்

  • IndiaGlitz, [Friday,October 02 2020]

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹாத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரையுலக பிரமுகர்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என புகழ் பெற்றிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா இதுகுறித்து தனது கருத்தை ஆவேசமாக கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அவமானம் அடைந்து நாம் ஒவ்வொருவரும் தலையைக் கீழே தொங்கவிட வேண்டும்.

பெண்களை பாதுகாப்பதில் நாம் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளோம். ஒவ்வொரு பாலியல் பலாத்காரத்தையும் ஒரு செய்தியாக கடந்து போகாமல், அவர்கள் பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என்று அவ்வாறு ஆவேசமாக கூறியுள்ளார். பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'சூரரை போற்று': அசத்தலான இரண்டு புதிய அப்டேட்டுக்கள்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'சூரரை போற்று' திரைப்படம் இம்மாதம் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

3 மாத குழந்தையை பாட வைத்த பிக்பாஸ் பிரபலம்

தனது மூன்று மாத குழந்தையை பாடவைத்த பிக்பாஸ் பிரபலம் மற்றும் பாடகியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா: மனைவிக்கும் பாதிப்பு என தகவல்

உலகிலேயே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்துவரும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலோனியா டிரம்ப்

உங்களுக்கு வெட்கமே இல்லையா? விமர்சகர்களை விளாசும் ஷிவானி நாராயணன்!

பிரபல தொலைக்காட்சி நடிகையான ஷிவானி நாராயணன் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது தெரிந்ததே

காந்தி பிறந்த நாளில் மகளின் பாடலை பதிவு செய்த கமல்ஹாசன்!

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள காந்தி சமாதியில் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் இன்று சிறப்பு