சிவகார்த்திகேயன் ரசிகர்களின் குழப்பத்திற்கு கிடைத்த விடை!

  • IndiaGlitz, [Saturday,November 09 2019]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஹீரோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. ’மால்டோ கிட்டபுலே’ என்று தொடங்கும் இந்த பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில், ரோகேஷ் பாடல் வரிகளில் உருவானது என்பது தெரிந்ததே. ரோகேஷ் ஏற்கனவே எழுதிய ‘தங்கமாரி ஊதாரி’ என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது.

இந்த நிலையில் இந்த பாடல் வட சென்னை பாஷையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் என்ற பாடலில் இடம்பெற்ற ‘மால்டோ கிட்டபுலே’ என்றால் என்ன அர்த்தம் என்பது குறித்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இந்த குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ஒருவன் வீரமாகவும் கெத்தாகவும் இருப்பதற்குப் பெயர்தான் ’மால்டோ கிட்டபுலே’ என்று படக்குழுவினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கத்தை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்களீன் குழப்பம் தீர்ந்து இருக்கும் என்று நம்பலாம்
 

More News

பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த பிரபல நடிகரின் வாரிசு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய மல்டி ஸ்டார் திரைப்படமான 'செக்கச் சிவந்த வானம்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது பொன்னியின் செல்வன்

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு  தற்கொலை!

சென்னை ஐஐடி விடுதி அறையில் முதலாமாண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அயோத்தி தீர்ப்பு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி கருத்து

நாடே பெரிதும் எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தாயையும் மகளையும் படுக்கைக்கு அழைத்த தமிழ் திரைப்பட நடிகர்! அதிர்ச்சி தகவல்

மாடல் அழகி மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான் என தமிழ் திரைப்பட நடிகர் ஒருவர் ஒப்புக்கொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில்,'சர்ச்சைக்குரிய அயோத்தியின் இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும்,