close
Choose your channels

பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த பிரபல நடிகரின் வாரிசு!

Saturday, November 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய மல்டி ஸ்டார் திரைப்படமான ’செக்கச் சிவந்த வானம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்திலும் பல பிரபல நடிகர்கள் நடிப்பதால் இந்த படமும் ஒரு மல்டி ஸ்டார் படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 12ம் தேதி தாய்லாந்தில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவியும் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தியும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. தற்போது ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியின் மகனுக்கு என்ன கேரக்டர் என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. ஏற்கனவே ஜெயம் ரவியும் அவரது மகன் ஆரவ்வும் ’டிக் டிக் டிக்’ என்ற படத்தில் அப்பா-மகனாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.