close
Choose your channels

பிக்பாஸ் எவிக்சன்: வெளியேறும் முதல் போட்டியாளர் யார்?

Saturday, October 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரில்லா மற்றும் ஆஜித் ஆகியோர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இவர்களில் சனம்ஷெட்டியை மட்டும் 11 பேர் நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அல்லது நாளை இந்த ஏழு பேர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார். மக்களின் வாக்குகளை குறைவாக பெற்று வெளியேறும் போட்டியாளர் யார்? என்பதை அறிய மிகவும் ஆவலுடன் பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி இந்த வாரம் ரேகா வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிக வாக்குகள் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்துள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கின்றன

கடந்த மூன்று சீசன்களில் முதல் சீசனில் அனுயா, இரண்டாவது சீசனில் மமதி, மூன்றாவது சீசனில் பாத்திமா பாபு ஆகியோர் முதல் போட்டியாளர்களாக வெளியேறினார்கள் என்பது குறிப்ப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.