close
Choose your channels

பிக்பாஸ் சீசன் 5 ஃபினாலேவில் கலந்து கொள்ளாதது ஏன்? ஆரியின் அதிர்ச்சி விளக்கம்!

Saturday, January 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்றே அதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்துகொண்ட முக்கிய போட்டியாளர்கள் மற்றும் டைட்டில் வின்னர்கள் அதில் கலந்து கொண்டு உள்ளார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்து சுரேஷ் சக்கரவர்த்தியும் நக்கலுடன் ஒரு ட்வீட்டை பதிவு செய்து இருந்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆரி விளக்கம் அளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் விருப்பத்துடன் இருந்தேன். கமல்ஹாசன் மற்றும் இதர போட்டியாளர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு பிக்பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு அழைப்பு வரவில்லை’ என்ற அதிர்ச்சியான காரணத்தை ஆரி கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரியை பிக்பாஸ் நிர்வாகம் ஏன் அழைக்கவில்லை என்பது மிகப் பெரிய கேள்விக்குறியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான இமான் அண்ணாச்சியும் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.