கோவை சரளா திருமணம் செய்யாததற்கு இப்படி ஒரு காரணமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

தமிழ் திரையுலகின் காமெடி நடிகைகளில் ஒருவர் கோவை சரளா என்பதும் கடந்த பல ஆண்டுகளாக இவர் தமிழ் தெலுங்கு மொழிகளில் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

விஜயகுமார், கே ஆர் விஜயா நடித்த ’வெள்ளி ரதம்’ என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமாகும் போது இவருக்கு வயது 15 என்பதும், அதேபோல் ’முந்தானை முடிச்சு’ படத்தில் இவர் கர்ப்பிணி வேடத்தில் நடித்தபோது இவரது வயது 16 என்பதும். அதற்கு அடுத்து ’சின்னவீடு படத்தில் பாக்யராஜ் அம்மாவாக 65 வயது தாய் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகையான இவர் திருமணமே செய்யவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும். கோவை சரளாவுக்கு நான்கு சகோதரிகள் மட்டும் ஒரு சகோதரர் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து அவர்களின் குழந்தைகளை படிக்க வைப்பதையே தனது வாழ்நாள் கடமையாக அவர் ஏற்று கொண்டதால் திருமணமே அவர் செய்து கொள்ளவில்லை. சகோதர சகோதரிகளின் குழந்தைகளை தன்னுடைய குழந்தையாக நினைத்து கோவை சரளா வளர்த்து வருகிறார். மேலும் ஆதரவற்ற ஆசிரமங்களுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து வருவதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை பிறருக்காகவே அவர் அர்ப்பணித்து கொண்டதால் தான் திருமணம் செய்யவில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கோவை சரளா கூறியுள்ளார். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். தன்னுடைய குடும்பத்திற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்த கோவை சரளா மீது அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகை என்பதையும் தாண்டி அவர் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

செடிகளை வைத்து கண்ணாடி கூண்டு முகக்கவசம்… எதற்கு இந்த முயற்சி?

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் உண்மையான தாவரச் செடிகளை வைத்து கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் நடமாடி வருகிறார்.

இன்றோடு எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேன்: தாமிராவின் கடைசி ஃபேஸ்புக் பதிவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட பலர் நடித்த 'ரெட்டைசுழி' என்ற திரைப்படத்தை இயக்கிவரும் அதன் பின்னர் சமுத்திரக்கனி,

பாதுகாப்பு இன்றி நடந்த படப்பிடிப்பு: சென்னை போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சென்னை அருகே கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் பாதுகாப்பின்றி நடந்த படப்பிடிப்பு குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ள

ஜடேஜாவை கேப்டனாக்கி அழகு பார்ப்பாரா தல தோனி?

சமீபத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 37 ரன்கள் அடித்தும், 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் ஜடேஜா மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 

விஜய் சேதுபதியால் இந்திய லெவலில் அளவில் பேசப்படும் வெற்றிமாறனின் 'விடுதலை'

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அகில இந்திய நடிகராக மாறிவிட்டார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'உப்பென்னா'