close
Choose your channels

இன்றோடு எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேன்: தாமிராவின் கடைசி ஃபேஸ்புக் பதிவு!

Tuesday, April 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட பலர் நடித்த ’ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தை இயக்கிவரும் அதன் பின்னர் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்த ’ஆண்தேவதை’ என்ற படத்தை இயக்கியவருமான இயக்குனர் தாமிரா இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அவரது குடும்பத்தை மட்டுமின்றி திரை உலகையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் தாமிராவின் கடைசி பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை.
யாவரும் கேளிர்.

இயக்குனர் தாமிராவின் இந்த கடைசி பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.