close
Choose your channels

ரஜினியின் 20 வருட 'காலதாமதம்' சரிதானா?

Wednesday, December 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1996ஆம் ஆண்டு முதன்முதலாக அரசியல் குறித்த தனது முதல் குரலை கொடுத்தார். அதுமுதல் அவர் நேரடி அரசியலுக்கு எப்போது வருவார் என அவரது ரசிகர்களும், அரசியல் பார்வையாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இருபது வருடங்களாக அவர் தேர்தலின்போது தனது ஆதரவு யாருக்கு என்பதை மட்டுமே கூறி, தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.

இந்த நிலையில் ஒரு முடிவை எடுப்பதற்கு ரஜினிக்கு 20 வருடங்கள் தேவைப்படுகிறதா? என்பதே ரஜினியின் மீது வைக்கப்படும் விமர்சனமாக உள்ளது. இந்த காலதாமதம் சரியா? என்ற பட்டிமன்றமும் நடந்து வருகின்றது.

ஆனால் ஒரு விஷயத்தில் அவர் உறுதியாக இருந்திருப்பது தற்போது தான் தெரியவருகிறது. தமிழக அரசியலை பொருத்தவரையில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இருபெரும் தலைவர்கள் இருக்கும் வரை மூன்றாவது தலைவர் உருவாக முடியாது என்ற நிலையே கடந்த 20 வருடங்களாக இருந்துள்ளது. இருவரும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும், மூன்றாவது தலைவர் உருவாகுவதை இருவருமே விரும்பியது இல்லை என்பதும், இந்த விஷயத்தில் இருவரும் ஒற்றுமையாக இருந்துள்ளனர் என்பதும் அரசியலை கூர்ந்து கவனித்திருப்பவர்கள் அறிவார்கள்

விஜயகாந்த், சரத்குமார் உள்பட ஒருசில நடிகர்கள் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் அரசியல் கட்சி ஆரம்பித்து வெற்றி பெறாமல் இருப்பதற்கு காரணம் இதுவே. ஏன் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக இருந்த சிரஞ்சீவி, அரசியல் கட்சி ஆரம்பித்து, பின்னர் என்ன நடந்தது? என்பது அனைவரும் அறிந்ததே. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த அரசியல் களத்தில் ரஜினி அரசியலில் குதித்திருந்தால் அவருக்கும் விஜயகாந்த் நிலைமைதான் ஏற்பட்டிருக்கும். எனவே தான் அவர் இத்தனை வருடங்களாக அமைதி காத்து வந்தார் என்பது 'சோ' போன்ற அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே தெரிந்த உண்மை

தற்போது ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார், உடல்நலம் காரணமாக கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்டார். இந்த இருபெரும் அரசியல் சாணாக்கியர்கள் இல்லாத அரசியல் களம் தற்போது வெற்றிடமாக உள்ளது. எனவே இதுவே அவர் காத்திருப்புக்கு இதுவே சரியான காரணம் என்றால், வரும் 31ஆம் தேதி அவர் எடுக்கவுள்ள அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருக்கும். இதற்கு மேலும் அவர் தனது முடிவை தெளிவாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தமாட்டார் என்று நம்புவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.