close
Choose your channels

கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்து இளம்பெண்ணின் கண்ணீரை துடைத்த தியாக மனைவி!

Thursday, September 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து இளம் பெண் ஒருவரின் கண்ணீரை துடைத்து வைத்த மனைவியின் தியாக மனப்பான்மை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பதி பகுதியை சேர்ந்த கல்யாண் என்பவர் டிக் டாக் மூலம் பிரபலமானவர். அதே டிக் டாக் மூலம் பிரபலமான விமலா என்பவரை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென நித்யாஸ்ரீ என்பவர் இவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டார். விமலாவை சந்தித்த இளம் பெண் நித்யாஸ்ரீ, ‘உங்களை திருமணம் செய்வதற்கு முன்னர் கல்யாண் என்னைத்தான் காதலித்தார் என்றும் நாங்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென எங்கள் உறவு சில காரணங்களால் முறிந்தது என்றும் அதன் பின்னர்தான் அவர் உங்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்றும் கூறியுள்ளார்.

தற்போது தன்னால் கல்யாண் இல்லாமல் வாழ முடியாது என்றும் தனக்கு கல்யாணை திருமணம் செய்துவைக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் கெஞ்சினாள். நித்யாஸ்ரீயை இறக்கத்துடன் பார்த்த கல்யாண் மனைவி விமலா தனது வாழ்க்கையை தியாகம் செய்ய முடிவு செய்துவிட்டார்.

தனது கணவர் கல்யாண் உடன் பேசி நித்யாஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்தார். தனது முன்னிலையிலேயே இருவருக்கும் கோவிலில் திருமணம் செய்து வைத்தார். மேலும் இருவரிடமும் தானும் உங்களுடன் உடன் வாழ்வேன் என்றும் அவர் சத்தியம் வாங்கிக் கொண்டார். தற்போது மூன்று பேரும் ஒரே வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.