பக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த பெண் கைது!

  • IndiaGlitz, [Sunday,November 10 2019]

பக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி தனது கணவருக்கு திருமணம் செய்து வந்த பெண்ணும் அவரது கணவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்ற பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கு செல்லக்கிளி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இந்த தம்பதிகள் தங்களுக்கு ஆண் குழந்தைகள் இல்லை என்ற ஏக்கம் அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியை கடத்தி தனது கணவருக்கு அவருடைய மனைவி செல்லக்கிளி திருமணம் செய்து வைத்துள்ளார்

சிறுமி காணாமல் அறிந்த அவரது பெற்றோர்கள் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மகளிர் காவல் நிலைய காவல் அதிகாரிகள் விசாரணை செய்ததில் செல்லக்கிளி தான் அந்த சிறுமியை கடத்தி தனது கணவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து செல்லக்கிளியும் அவரது கணவர் அசோக்குமார் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர்

ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக தனது கணவருக்கு பக்கத்து வீட்டு சிறுமியை திருமணம் செய்து வைத்த மனைவியின் இந்த கொடூர செயல் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

More News

4வது மனைவியால் கொல்லப்பட்ட கார் திருடன்: கொலைக்கு உதவிய 3வது காதலன்

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் அவரது நான்காவது மனைவியால் கொலை செய்யப்பட்டதும் அந்தக் கொலையை செய்த பெண்ணுக்கு அவருடைய மூன்றாவது காதலன் உதவி செய்ததுமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தர்பாருக்காக ரஜினி அப்படி பேசியிருக்கலாம்: தமிழக அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று பேட்டி அளித்த போது 'தமிழகத்தில் இன்னும் ஆளுமை உள்ள சரியான தலைவர்கள் இல்லை' என்று அழுத்தமாகக் கூறினார்.

ரியோராஜ்-பத்ரி படத்தில் இணைந்த பிரபல குணசித்திர நடிகை!

தொலைக்காட்சி நடிகரான ரியோராஜ் நடித்த முதல் திரைப்படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் குழப்பத்திற்கு கிடைத்த விடை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஹீரோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து

பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த பிரபல நடிகரின் வாரிசு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய மல்டி ஸ்டார் திரைப்படமான 'செக்கச் சிவந்த வானம்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது பொன்னியின் செல்வன்