மாமியாரிடம் சமரசம் பேச சென்ற கணவரை கொலை செய்த மனைவியின் கள்ளக்காதலன்! 

  • IndiaGlitz, [Saturday,September 05 2020]

மாமியாரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற கணவரை அவரது மனைவியின் கள்ளக்காதலன் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் மதுரையை சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜோதிலட்சுமி பெற்றோர்கள் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியதால் ஜோதிலட்சுமி தனது பெற்றோரை பார்த்துக் கொள்வதற்காக சொந்த ஊர் சென்றார். அவருக்கு உதவியாக அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் இருந்துள்ளார்

கார்த்திக் மற்றும் ஜோதிலட்சுமி இடையேயான உறவு நட்பாக மாறி நாளடைவில் காதலர்களாகவும் மாறி உள்ளதாக தெரிகிறது இந்த நிலையில் பெற்றோர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பின் தனது கணவர் வீட்டிற்கு திரும்பிய ஜோதிலட்சுமி, அதன் பின்னரும் கார்த்திக்குடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார்

இந்த விவகாரம் கணவர் மணிகண்டனுக்கு தெரியவர அவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு முற்றி ஒரு கட்டத்தில் தனது குழந்தையுடன் ஜோதிலட்சுமி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் ஜோதிலட்சுமி தனது கள்ளக்காதலன் கார்த்திக் மற்றும் சிலரை அழைத்துக்கொண்டு கணவரின் வீட்டுக்குச் சென்று தனது தாயார் சமரசம் செய்ய அழைப்பதாக கூறினார்

மாமியார் வீட்டுக்கு சமரசம் பேச சென்ற மணிகண்டன் அங்கு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டனின் பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஜோதிலட்சுமி வீடு அருகே உள்ள ஒரு புதரில் மணிகண்டனின் பிணம் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

இதுகுறித்து ஜோதிலட்சுமி மற்றும் அவருடைய பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்ததாக கருதப்படும் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் கார்த்திக் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மட்டுமின்றி ஜோதிலட்சுமி மற்றும் அவருடைய பெற்றோர்களும் மணிகண்டனின் கொலைக்கு உடந்தை என மணிகண்டனின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை கூறிய திரையுலகின் இருமேதைகள்

தமிழ் திரை உலகின் இரு மேதைகள் என்று கூறப்படும் கமலஹாசன் மற்றும் வைரமுத்து ஆகிய இருவரும் இன்று ஆசிரியர் தின வாழ்த்துக்களை தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் 

விஜய்யால் எம்ஜிஆர் இடத்தை நிரப்ப முடியுமா? அமைச்சர் ஜெயகுமார் பதில்

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் அதுகுறித்து அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் ஒரு பக்கம் தகவல்

கொரோனா பரிசோதனையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தமிழகம்!!! முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்!!!

தமிழகத்தில் (ஆகஸ்ட் 6) ஒரேநாளில் 80 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது

திரையரங்குகள் திறப்பது எப்போது? மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் ஸ்தம்பித்துப் போய் இருந்தனர்.

பொதுமக்களால் தாக்கப்பட்டாரா 'கோமாளி' பட நடிகை: வைரலாகும் வீடியோ

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள்