கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்த கூலிப்படையை ஏவிய மனைவி: அதிர்ச்சி தகவல் 

  • IndiaGlitz, [Friday,August 14 2020]

நாகர்கோவில் அருகே கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்தி கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணேஷ் என்பவருக்கும், காயத்ரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் காயத்ரிக்கு திருமணத்திற்கு முன்பே யாசீன் என்பவருடன் காதல் இருந்ததாகவும், திருமணத்திற்குப் பின்னரும் அவருடன் சுற்றிக் கொண்டு இருந்தகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் யாசீன் தனது காதலியை அருகில் வைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக காயத்ரி இருக்கும் பகுதியிலேயே ஒரு பிளே ஸ்கூல் ஒன்றை தொடங்கினார். இந்த பிளே ஸ்கூல் தொடங்குவதற்கும் காயத்ரியே தனது கணவனிடம் ரூ.10 லட்சம் வாங்கி கொடுத்துள்ளார். தனது அண்ணன் தொழில் செய்யப்போவதாக பொய் கூறி கணவரிடம் இந்த பணத்தை வாங்கி யாசீனிடம் கொடுத்ததாக தெரிகிறது

காயத்ரி வீட்டின் பக்கத்திலேயே பிளே ஸ்கூல் இருந்ததால் காயத்ரியும் யாசீனும் அடிக்கடி காதல் லீலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் 10 லட்ச ரூபாயை அண்ணனிடம் இருந்து திருப்பி வாங்கி வா என்று காயத்ரியிடம் கணேஷ் கூறியபோது தனது கள்ளக்காதல் வெளியே தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்ய காயத்ரி திட்டமிட்டார்

இதனையடுத்து யாசினிடம் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்யுமாறு காயத்ரி கூறினார். சம்பவத்தன்று வீட்டின் பின் கதவை பூட்டாமல் காயத்ரி வைத்திருந்ததால், அதன் வழியாக யாசின் மற்றும் கூலிப்படையினர் உள்ளே வந்து கணேஷின் தலையில் கத்தியால் வெட்டினார்கள். அது மட்டுமன்றி கணேஷின் ஆணுறுப்பையும் சிதைத்து சென்றதாக தெரிகிறது. கணேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அந்தப் பெண்தான் கூலிப்படையை ஏவி கணேஷின் ஆணுறுப்பை சேதம் செய்ததாக போலீஸ் விசாரணையில் கூற காயத்ரி திட்டமிட்டிருந்தார்.

ஆனால் போலீசாரின் சந்தேகப்பார்வை காயத்ரி மீது இருந்ததால் அவரிடம் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில் காயத்ரி வேறு வழியின்றி உண்மையை கூறிவிட்டார். காயத்ரிக்கு உறுதுணையாய் இருந்த விஜயகுமார் கருணாகரன் ஆகிய இரண்டு கூலிப்படை நபர்களையும் காயத்ரியையும் போலீஸார் கைது செய்ததோடு, தலைமறைவாக உள்ள யாசினை தேடி வருகின்றனர். தற்போது கணேஷ் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு: கமல் குறித்து கவியரசர் எழுதிய கவிதை

உலகநாயகன் கமலஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகி 61 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.

வறுமையில் வாடும் திரையரங்க ஊழியர்களுக்கு விருந்து வைத்து அசத்திய விஜய் ரசிகர்கள்: பரபரப்பு தகவல்

கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திறக்கப்படவில்லை என்பதும் இனி எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவல் இல்லை என்பதும் தெரிந்ததே

எனக்காக ஒரு கவிதை எழுதுங்கள்: ஹரிஷ் கல்யாணிடம் வேண்டுகோள் விடுத்த பிக்பாஸ் நடிகை

பிக்பாஸ் போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன், பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே ஒருவருக்கு ஒருவர் ஈர்ப்புடன் இருந்ததாக கூறப்பட்டது

3 மாதத்தில் பெய்யவேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டித்தீர்த்தக் கொடூரம்!!!

பருவமழை காலத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை இழப்பதும், சில ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதும் சகஜமாக இருந்து வருகிறது

சொகுசு காருக்குள் விபச்சாரம்: 3 ஆண்கள், 2 பெண்களை சுற்றி வளைத்த போலீஸ்

சென்னையின் முக்கிய பகுதியான வேளச்சேரியில் சொகுசு காருக்குள் விபச்சாரம் செய்த மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை சுற்றிவளைத்து போலீஸ் கைது செய்த சம்பவம்