ஊரடங்கு உத்தரவால் ஊருக்குள் வரும் காட்டு விலங்குகள்: செங்கல்பட்டு பகுதியில் பதட்டம்

காட்டு விலங்குகள் வாழும் பகுதியை மனிதன் ஆக்கிரமித்த நிலையில் தற்போது இந்த நிலைமை தலைகீழாகி ஊருக்குள் காட்டு விலங்குகள் வலம் வரத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மூணாறு, திருப்பதி திருமலை உள்ளிட்ட பகுதியில் காட்டு விலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சர்வ சாதாரணமாக வந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா வேல்டு சிட்டியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா சிட்டியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில் அங்கு உள்ள ஐடி நிறுவனங்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மனித நடமாட்டம் முற்றிலும் இல்லாமல் உள்ள நிலையில் தற்போது அங்குள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை போன்ற ஒரு விலங்கு சாலைகளை கடந்து செல்வதும் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் வந்து செல்வதுமான காட்சிகள் இருந்துள்ளது

இது சிறுத்தையா அல்லது காட்டுப்பூனையா என்ற விவாதம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் அந்த பகுதியில் ஏற்கனவே கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சிறுத்தையாக இருந்தால் அதை கண்டிப்பாக கூண்டு வைத்துப் பிடித்து அப்பகுதி மக்களை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறியபோது, ‘சிசிடிவி கேமராவில் பதிவானது காட்டு பூனை தான் எனவே மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் காட்டுப் பூனை வெளியே வந்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்

More News

நடிகை காஜல் அகர்வால் செய்த மிகப்பெரிய நிதியுதவி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்களுக்கு, நலிந்த நடிகர்களுக்கு என பல்வேறு தரப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது

கொரோனா பரபரப்பிலும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: 3 பேர் கைது

உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கொரோனா வைரசால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே கொரோனவுக்கு எதிராக மீம்ஸ்களும், கொண்டாட்டங்களும் நடந்து வருவது

காஜல் அகர்வாலிடம் உதவி கேட்ட 'பீட்டா இந்தியா'

இந்தியாவில் விலங்குகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் 'பீட்டா இந்தியா' என்ற அமைப்பு தற்போதைய கொரோனா ஊரடங்கு நேரத்தில் தெருவில் உணவின்றி நடமாடி வரும் நாய் உள்ளிட்

தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் திறக்கும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்களுக்காக தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்க வேண்டும் என சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த

உங்களை மாதிரி ரசிகர்கள் கிடைக்க விஜய் கொடுத்து வச்சிருக்கணும்: பிரபல இயக்குனர் பாராட்டு

தமிழகத்துக்கு எப்போதும் இயற்கைப் பேரிடர் வந்தாலும் முதல் நபராக சமூக சேவை செய்து பொதுமக்களுக்கு உதவி செய்வது விஜய் ரசிகர் தான் என்பது அனைவரும் அறிந்ததே