close
Choose your channels

காஜல் அகர்வாலிடம் உதவி கேட்ட 'பீட்டா இந்தியா'

Thursday, April 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் விலங்குகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ‘பீட்டா இந்தியா’ என்ற அமைப்பு தற்போதைய கொரோனா ஊரடங்கு நேரத்தில் தெருவில் உணவின்றி நடமாடி வரும் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்காக 24 மணி நேரமும் உதவி செய்து வருகின்றது. இந்த அமைப்புக்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் ‘பீட்டா இந்தியாவின்’ சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வாலிடம் நிதியுதவி கேட்டு டுவீட் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேரத்திலும் 24 மணி நேரமும் தாங்கள் விலங்குகள் நலனில் அக்கறை கொள்வதாகவும், எனவே தங்களால் முடிந்த நிதியுதவியை செய்ய வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வாலிடம் பீட்டா இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏற்கனவே பீட்டா இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வந்த நடிகை காஜல் அகர்வால், தற்போது பீட்டா இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அந்த அமைப்புக்கு நிதியுதவி செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.