மருமகள் தொலைந்து போன மகளா? மகனின் நிலைமை என்ன? திருமணம் நடந்ததா?

  • IndiaGlitz, [Wednesday,April 07 2021]

சீனாவில் பெண் ஒருவரின் மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்த நிலையில் தனது வருங்கால மருமகள் 20 வருடங்களுக்கு முன் தொலைந்துபோன மகள் என்பதை அவர் கண்டுபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

சீனாவை சேர்ந்த ஜியாங்சு என்ற மாகாணத்தில் சமீபத்தில் திருமணம் ஒன்று நடக்க ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருந்தது. மணமகன் மணமகள் ஆகியோர்கள் திருமணத்துக்கு தயாராகிவிட்ட நிலையில் மணமகனின் தாயார் தற்செயலாக வருங்கால மருமகள் கையிலுள்ள அடையாளம் ஒன்றை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

20 வருடங்களுக்கு முன் தன்னுடைய தொலைந்து போன மகள் கையிலும் இதேபோன்று அடையாளம் இருந்ததை அடுத்து அவர் மணமகளின் பெற்றோரிடம் இதுகுறித்து கேட்டார். தங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அவருக்கு எப்படி தெரிந்தது என்று மணமகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இந்தப் பெண்ணை தாங்கள் தத்து எடுத்து வளர்த்து வருவதாகவும் 20 வருடங்களுக்கு முன் சாலை ஒன்றில் கண்டதாகவும் கூறினார்கள். இதனையடுத்து தனக்கு மருமகளாக வரவிருப்பவர் தனது மகள் தான் என்பதை உறுதி செய்து கொண்ட உறுதி செய்து கொண்ட அந்தப் பெண் தனது மகளை கட்டியணைத்து பாச மழை பொழிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் மணமகன் மணமகள் ஆகிய இருவரும் அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் இருவருக்கும் திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் ஏற்பட்டது. ஆனால் அங்கே தான் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டது. இருபது வருடங்களுக்கு முன் மகள் தொலைந்ததை அடுத்து தான் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்ததாகவும் அந்த குழந்தை தான் தற்போதைய மணமகன் என்றும் எனவே இருவரும் அண்ணன் தங்கை இல்லை என்றும், அதனால் திட்டமிட்டபடி இந்த திருமணம் நடக்கலாம் என்றும் அந்த பெண் கூறியதை எடுத்து இருவருக்கும் சிறப்பாக திருமணம் நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

ஓட்டு போட்ட கையோடு தளபதி விஜய் செய்த முதல் வேலை: வைரல் புகைப்படம்

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தளபதி விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என்பதும், அவர் சைக்கிளில் சென்று வாக்கு அளித்ததற்கு நெட்டிசன்கள்

கல்வி உதவி கேட்ட மாணவிக்கு காஜல் அகர்வால் வழங்கிய தொகை: எவ்வளவு தெரியுமா?

கல்விக்காக உதவி கேட்ட மாணவி ஒருவருக்கு நடிகை காஜல் அகர்வால் மிகப்பெரிய தொகை ஒன்றை வழங்கியதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கவச உடை அணிந்து ஜனநாயக கடமையை ஆற்றிய கனிமொழி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் பொதுமக்கள்

ரொம்ப கஷ்டமா இருக்கு, அழுகையா வருது: 'குக் வித் கோமாளி' புகழின் நெகிழ்ச்சியான பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் முதல் சீசஐவிட பல மடங்கு இந்த 2வது சீசனுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது

'குக் வித் கோமாளி' ஃபைனல்: பிரபல நடிகரின் கையால் டைட்டில் பட்டம் பெற்றாரா கனி?

ரசிகர்களின் மாபெரும் ஆதரவுடன் கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பி வந்த 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் வாரத்துடன் நிறைவு அடைகிறது என்பதும்