close
Choose your channels

மருமகனுடன் கள்ளத்தொடர்பு: இடையூறாக இருந்த மகனை கொலை செய்த மாமியார்

Tuesday, March 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மருமகனோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்த மாமியார் ஒருவர் இந்த கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் தனது மகனையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை என்ற பகுதியில் வசந்தா என்பவர் கணவரை பிரிந்து 20 வயது மகள் மற்றும் 13 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தனது மகளுக்கு சுபனன் என்பவரை திருமணம் செய்து வைத்தார். தனது மகளை விட 15 வயது மூத்தவர் இந்த சுபனன் என்பதும் மருமகனை தன்னுடைய வீட்டிலேயே அவர் வைத்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மருமகனுடன் வசந்தாவுக்கு கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதலை ஒருநாள் தற்செயலாக அவரது மகன் பள்ளியில் இருந்து திரும்பி வந்த போது பார்த்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் தனது தந்தையிடம் கூறப் போவதாக இருவரையும் மிரட்டியுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தாவும் சுபனனும், அந்த சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக தூக்க மாத்திரைகளை தின்று கொலை செய்துள்ளனர்.

இதனை அடுத்து தனது மகன் தெரியாமல் தூக்க மாத்திரையை சாப்பிட்டு இறந்துவிட்டதாக கூறி வசந்தா கூச்சல் போட்டுள்ளார். அவர் கதறி அழுவதை பார்த்து உண்மையாகவே அவரது மகன் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நம்பினார்கள். இதனையடுத்து அவசர அவசரமாக தனது மகனின் பிணத்தை வசந்தா இறுதிச் சடங்கும் செய்து முடித்துவிட்டார்.

இந்த நிலையில் வசந்தாவின் கணவர் மோகனன் தனது மனைவி மீது சந்தேகம் கொண்டு தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணையில் இறங்கிய போலீசார் வசந்தாவை இரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது சுபனனுக்கும் வசந்தாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இந்த கள்ளத்தொடர்பை நிரந்தரமாக வைத்துக் கொள்வதற்காகவே தனது மகளுக்கு அவர் சுபனனை திருமணம் செய்து வைத்ததாகவும் தெரியவந்தது.

இதனை அடுத்து வசந்தா மற்றும் சுபனன் ஆகிய இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். இதனையடுத்து இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டு தாங்கள்தான் சிறுவனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்கள். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

கள்ளக் காதலனை தன்னுடன் வைத்துக்கொள்ள அவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததோடு அந்த கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சொந்த மகனையே கொலை செய்த வசந்தாவால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.