பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றிய காதலனை பின்னால் இருந்தே கத்தியால் குத்திய காதலி… அதிர்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Wednesday,January 13 2021]

ஆந்திர மாநிலத்தில் காதலுடன் பைக்கில் சென்ற காதலி ஒருவர் பின்னால் இருந்தே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மலச்சம்பள்ளி எனும் பகுதியில் வசித்து வரும் பவானி என்ற இளம் பெண்ணும் தாலிப்புடி எனும் பகுதியில் வசித்து வரும் தத்தாஜி என்ற இளைஞரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தத்தாஜி தனது காதலியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்துள்ளார். இத்திருமணத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் பவானியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் ரகசிய திருமணத்தில் விருப்பம் இல்லாத பவானி தன்னை ஊர் அறிய திருமணம் செய்து கொள்ளமாறு பலமுறை வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் இந்த கோரிக்கைக்கு தத்தாஜி சிறிதும் செவிக் கொடுக்காமல் இருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த பவானி நேற்று ஊர் சுற்றலாம் என தன்னுடைய ஊருக்கே தத்தாஜியை வரவழைத்து இருக்கிறார். நேற்று காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களுக்கு ஊர்ச் சுற்றிய இந்த ஜோடி இறுதியில் பவானி வீட்டை நோக்கி சென்றிருக்கிறது. இந்நிலையில் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த தத்தாஜியை பவானி பின்னால் இருந்து திடீரென்று கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து தத்தாஜி உயிரிழந்து உள்ளார்.

பின்னர் பவானி தத்தாஜியின் தாயாருக்கு செல்போனில் அழைத்து உங்களது மகனை கொன்று விட்டேன். வந்து உடலை எடுத்துச் செல்லுங்கள் என ஆத்திரமாகக் கூறியதாகவும் செய்தி தெரிவிக்கிறது. இந்நிலையில் ஊர் அறிய திருமணம் செய்ய வேண்டும் என நினைத்த பெண் இளைஞனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

ஏற்கனவே கொரோனா தாக்கி இருந்தால் தடுப்பூசி போட வேண்டாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

இந்தியாவில் வரும் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் நடைமுறை அமலுக்கு வருகிறது.

ம.பியில் பூதாகரமாகும் விஷச்சாராய விவகாரம்? 20 ஆக அதிகரித்த உயிரிழப்பு!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் நேற்று விஷச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராம்ஸூ, உனக்கு வெளியே போனா விஷப்பாட்டில் தான்: ரம்யாவை சீண்டிய பாலா

பிக்பாஸ் வீட்டில் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் கிட்டத்தட்ட அனைவரும் மீண்டும் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் நிலையில் அவர்களிடம் இருந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற

என்னால ஏற்பட்ட நெகட்டிவ், எல்லாம் பிரபா தாங்குனான்: ஆரியிடம் புலம்பிய அனிதா!

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பல போட்டியாளர்கள் விருந்தினர்களாக வந்திருந்த நிலையில் இன்றைய எபிசோடில் உள்ளே வருகிறார் அனிதா. அனிதா தந்தை காலமானது குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஆரிக்கு 5வது இடம்: பரபரப்பு தகவல்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசனின் இறுதிப்போட்டி இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது என்பதும் இந்த இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.