close
Choose your channels

4 குழந்தைகளின் தாயை காதலித்த இளைஞன்! மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்!

Wednesday, June 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் அந்த காதலை ஏற்க மறுத்ததால் அந்த பெண்ணின் ஒரு குழந்தையை இளைஞர் கடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியை சேர்ந்த காம்லேஷ் என்ற பெண்ணுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இவரது வீட்டிற்கு ஒரு வேலையாக வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் காம்லேஷ் அவரை திட்டி விரட்டிவிட்டார்.

இந்த நிலையில் காம்லேஷின் 9 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அந்த பெண் போலீசிடம் புகார் செய்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு இளைஞர் காணாமல் போன சிறுமியை அழைத்து கொண்டு சென்றது சிசிடிவி வீடியோவில் தெரிந்தது. இதனையடுத்து காம்லேஷை அழைத்து அந்த இளைஞரை தெரியுமா? என போலீசார் கேட்டபோது அந்த இளைஞர்தான் தன்னை காதலிப்பதாக கூறியதாகவும், தான் மறுத்துவிட்டதாக தெரிவித்ததாகவும் கூறினார்.

இதனையடுத்து அந்த இளைஞரின் விபரங்களை சேகரித்த போலீசார் அடுத்த சில மணி நேரங்களில் அவரை கைது செய்ததோடு, கடத்தப்பட்ட சிறுமியையும் மீட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.