close
Choose your channels

ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர்

Wednesday, June 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


(சித்தரிக்க பட்ட புகைப்படம் )

திருமண வயதான பல இளைஞர்களுக்கு ஒரு பெண்ணை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்யவே போதும் போதுமென்று ஆகிவிடும் நிலையில் தாராபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து இருவரையும் ஒரே வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

தாராபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயது விதவைப்பெண் ஒருவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய எண்ணியிருந்த நிலையில் ஆட்டோ டிரைவருக்கு 19 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரையும் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை ஆட்டோ டிரைவர் காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் இரண்டு பெண்களுக்கும் ஆட்டோ டிரைவரின் இரட்டை காதல் தெரிந்துவிட்டது. இந்த நிலையில் இருவரில் ஒருவர் ஆட்டோ டிரைவரை விட்டுக்கொடுக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இருவருமே ஆட்டோ டிரைவரை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இந்த நிலையில் இருவரும் ஆட்டோ டிரைவரை திருமணம் செய்து ஒரே வீட்டில் குடும்பம் நடத்த ஒப்புக்கொண்டனர். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் இருவரையும் பழனி கோவிலுக்கு அழைத்து சென்று ஒரே நேரத்தில் இருவரையும் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இரண்டு பெண்களின் பெற்றோர்களுக்கு இந்த விஷயம் தெரிந்து காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மூன்று பேர்களையும் அழைத்து விசாரித்தபோது ஆட்டோ டிரைவரின் இரண்டு மனைவிகளும் பிடிவாதமாக அவருடன் மட்டுமே வாழ்வதாக கூறினர். இருவரும் மேஜர் என்பதால் வேறு வழியின்றி இருவரையும் போலீசார் ஆட்டோ டிரைவருடன் அனுப்பி வைத்தனர். இந்த நூதன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.