தினமும் அடி, உதை… கணவரின் தொல்லை தாங்காமல் கொன்று, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்த மனைவி!!!

  • IndiaGlitz, [Thursday,September 24 2020]

 

ராஜஸ்தான் மாநிலத்தின் இளம்பெண் ஒருவர் கணவருடன் நடந்த வாக்குவாதத்தின்போது கயிற்றைக் கொண்டு அவரது கழுத்தை இறுக்கியிருக்கிறார். எதிர்பாராத விதமாக அவர் இறந்துவிட, பயந்துபோன அந்த இளம்பெண் கணவரது உடலை கட்டிலுக்கு அடியில் 28 மணிநேரமாக மறைத்து வைத்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அம்மாநிலத்தின் சுரு மாவட்டத்தில் உள்ள சங்கத்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் நிர்மல் சிங். அவருடைய மனைவி நீரஜ். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிர்மல் தினமும் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமையும் இதேபோல நடைபெற்ற சம்பவத்தில் ஆத்திரமடைந்த நீரஜ் ஒரு கயிற்றை எடுத்து கணவரின் கழுத்தை இறுக்கியிருக்கிறார். இந்த விபத்தில் நிர்மல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார்.

இதனால் பதறிப்போன நீரஜ் என்ன செய்வதென்று தெரியாமல் கட்டிலுக்கு அடியிலேயே மறைத்து வைத்து இருக்கிறார். இப்படியே 28 மணிநேரம் கழிந்திருக்கிறது. அதற்குப்பின் நிர்மலை தேடி அவருடைய அண்ணன் அசோக் சிங் ஜாட் வந்திருக்கிறார். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் அதிர்ந்து போன அவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்து இருக்கிறார். நிர்மலின் உடலை மீட்ட போலீசார் நீரஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

விஜயகாந்த் எப்படி இருக்காரு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி: தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு 

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து 10, 11, 12 வகுப்புகளின் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்

கைது செய்யப்படுகிறாரா மீராமிதுன்? ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு!

பிக்பாஸ் 3வது சீசன் போட்டியாளரும், சூப்பர் மாடலுமான மீராமிதுன், பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும்போதே சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்டார்.

சக்ரா படத்தை ஓடிடிக்கு விற்க சென்னை ஐகோர்ட் தடை: பரபரப்பு தகவல்

நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை வரும் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சர்வதேச விண்வெளி நிலையத்தை லைட்டா நகர்த்தி வைத்த விஞ்ஞானிகள்!!!  காரணம் இதுதான்…

பொதுவாக விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களில் பெரும்பாலானை தொடர்ந்து இயக்கத்தில் இருப்பதில்லை.