வரதட்சணை புகாரில் சிக்கிய 'யட்சன்' நடிகரின் உருக்கமான கடிதம்

  • IndiaGlitz, [Saturday,September 19 2015]

அலிபாபா, கழுகு, மற்றும் சமீபத்தில் வெளியான 'யட்சன்' போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணா, தனது மனைவி ஹேமலதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யவுள்ளதாகவும், இந்த வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கிருஷ்ணா மீது அவரது மனைவி ஹேமலதா கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் நடிகர் கிருஷ்ணா மீதும் அவரது பெற்றோர் மீதும், வரதட்சணை ஒழிப்பு மற்றும் தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்த செய்திகள் பல ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் கிருஷ்ணா பத்திரிகையாளர்களுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

அன்புள்ள பத்திரிகையாளர் நண்பர்களுக்கு, நான் சினிமாவில் தடம் பதித்த நாள் முதல் இன்று வரை எனக்கு அளவில்லா ஆதரவையும் அன்பையும் அளித்தவர்கள் நீங்கள். சற்றும் எதிர்பாராவிதமாக என்மீது வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தின் படி இருவருக்குமிடையே சமரச பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. எங்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நம் நாட்டின் சட்ட வீதிமுறைகளை மதிப்பவன் நான். எனவே இவ்வழக்கினை உறிய முறையில் விசாரிக்க எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன். இது என் தனிப்பட்ட விஷயம் என்பதால் ஊடகத்திலுள்ள என் நண்பர்களும் மற்றவர்களும் என் அந்தரங்கத்தை மதித்து எனக்கு உதவு வேண்டும் என்பதையே விரும்புகிறேன். ஏனென்றால் இது என்னை நேசிக்கும் பலரை பாதிக்கிறது. தொடரும் உங்கள் ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி.

இவ்வாறு கிருஷ்ணா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

More News

நயன்தாராவின் 'மாயா'வுக்கு சர்வதேச அங்கீகாரம்?

அஸ்வின் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'மாயா' திரைப்படம் நேற்று முன் தினம் ரிலீஸாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா?

நடிகர் ஆர்யா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான 'மீகாமன்', 'புறம்போக்கு', 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க', 'யட்சன்' ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சூப்பர் ஹிட் ஆகவில்லை....

விஜய்க்கு டிரைவர் ஆனாரா 'நான் கடவுள்' ராஜேந்திரன்?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.....

இந்திய அளவில் முதல் இடத்தை நோக்கி செல்லும் 'புலி'

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.....

வித்யூலேகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜீத்?

ஏற்கனவே ''வீரம்'' படத்தில் அஜீத்துடன் நடித்திருந்த நகைச்சுவை நடிகை வித்யூலேகா ராமன், சமீபத்தில் ''தல 56'' படத்திலும் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் அஜீத், வித்யூலேகா படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது......