close
Choose your channels

கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா?

Saturday, September 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஆர்யா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான 'மீகாமன்', 'புறம்போக்கு', 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க', 'யட்சன்' ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சூப்பர் ஹிட் ஆகவில்லை. இதற்கு காரணம் இந்த படங்கள் அனைத்திலுமே ஆர்யா இரண்டு கதாநாயகர்களில் ஒருவராகவே நடித்து வந்துள்ளார் என்றும் இதை தவிர்க்க அவர் இனிமேல் அடுத்து வரும் படங்களில் தனி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றும் அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆலோசனைக்கு ஏற்ப சோலோ ஹீரோ படம் ஒன்றில் அவர் விரைவில் ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்படுகிறது. 'கோ', 'அயன்', 'அனேகன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த் ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு 'மாற்றான்', 'அனேகன்' ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாகவும், ஆனால் தற்போது ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த்-ஆர்யா இணையும் இந்த படம் ஆர்யாவின் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்யா நடித்து வரும் 'இஞ்சி இடுப்பழகி' மற்றும் 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளதால் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.