மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த கணவரின் மாமா: அரிவாளால் வெட்டி கொலை செய்த இளம்பெண்

23 வயது இளம்பெண் ஒருவரின் கணவரின் அக்காள் கணவர் மயக்க மருந்து கொடுத்து தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்ததை அறிந்து ஆத்திரமடைந்து கணவரின் அக்காள் கணவர் என்றும் பார்க்காமல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் தேனி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அருகே பாண்டீஸ்வரன்-நிரஞ்சனா என்ற தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் வீட்டிற்கு பாண்டீஸ்வரனின் அக்காள் கணவர் மணிகண்டன் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். மணிகண்டன் உறவினர் என்பதால் யாருக்கும் சந்தேகம் இல்லாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் நிரஞ்சனா தனியாக இருக்கும்போது அவரது வீட்டிற்கு வந்த மணிகண்டன், நிரஞ்சனா குடிக்கும் டீயில் மயக்க மருந்து கொடுத்து அதன்பின் ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. அதன் பின் அந்த வீடியோவை காட்டி மணிகண்டன், நிரஞ்சனாவை மிரட்டியுள்ளார்.

இதனால் நிரஞ்சனாவும் அவருடைய கணவரும் ஆத்திரமடைந்து இருவரும் நேராக மணிகண்டன் இருக்கும் இடம் சென்று இருவரும் மாறி மாறி அரிவாளால் மணிகண்டனை வெட்டி கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த மணிகண்டனின் மனைவியையும் வெட்டினர். இதனை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் கணவன் பாண்டீஸ்வரன் மற்றும் மனைவி நிரஞ்சனா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

23 வயது பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்த உறவினரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

ரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்!

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான ஆர்யா-சாயிஷா ஜோடி, முதல் முதலாக ஜோடியாக நடித்த திரைப்படம் 'டெடி'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

குளிப்பதை வீடியோ எடுத்து 17 வயது சிறுமியை சீரழித்த 30 வயது பெண்!

பெண்களுக்கு ஆண்களால்தான் பாலியல் பலாத்கார அபாயம் ஏற்படுகிறது என்றால், பெண்களுக்கு பெண்களே பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த சம்பவம் கேரளாவில் நடைபெற்று உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அளித்துள்ளது

கீர்த்திசுரேஷை அடுத்து 'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டி இமான் இசையமைப்பில் தயாராக உள்ள 'தலைவர் 168' படத்தின் அறிவிப்பு

முதன் முறையாக தாயின் குரலைக் கேட்கும் குழந்தை..!வீடியோ.

செவித்திறன் இல்லாமல் பிறந்த குழந்தை ஒன்றுக்கு ஹியரிங் எய்ட் இயந்திரம் பொருத்தப்பட்டவுடன் தாயின் குரலைக் கேட்டு அந்தக் குழந்தை காட்டும் ரியாக்‌ஷன் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

உலகிலேயே இளமையான பிரதமர்..!

பின்லாந்து நாட்டின் பிரதமராக 34 வயதான சன்னா மரின் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.