close
Choose your channels

மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த கணவரின் மாமா: அரிவாளால் வெட்டி கொலை செய்த இளம்பெண்

Monday, December 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

23 வயது இளம்பெண் ஒருவரின் கணவரின் அக்காள் கணவர் மயக்க மருந்து கொடுத்து தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்ததை அறிந்து ஆத்திரமடைந்து கணவரின் அக்காள் கணவர் என்றும் பார்க்காமல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் தேனி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அருகே பாண்டீஸ்வரன்-நிரஞ்சனா என்ற தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் வீட்டிற்கு பாண்டீஸ்வரனின் அக்காள் கணவர் மணிகண்டன் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். மணிகண்டன் உறவினர் என்பதால் யாருக்கும் சந்தேகம் இல்லாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் நிரஞ்சனா தனியாக இருக்கும்போது அவரது வீட்டிற்கு வந்த மணிகண்டன், நிரஞ்சனா குடிக்கும் டீயில் மயக்க மருந்து கொடுத்து அதன்பின் ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. அதன் பின் அந்த வீடியோவை காட்டி மணிகண்டன், நிரஞ்சனாவை மிரட்டியுள்ளார்.

இதனால் நிரஞ்சனாவும் அவருடைய கணவரும் ஆத்திரமடைந்து இருவரும் நேராக மணிகண்டன் இருக்கும் இடம் சென்று இருவரும் மாறி மாறி அரிவாளால் மணிகண்டனை வெட்டி கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த மணிகண்டனின் மனைவியையும் வெட்டினர். இதனை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் கணவன் பாண்டீஸ்வரன் மற்றும் மனைவி நிரஞ்சனா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

23 வயது பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்த உறவினரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.