close
Choose your channels

சென்னையை சேர்ந்த நடிகை கடலூரில் கைது

Friday, November 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போலீசாரால் கைது செய்யப்பட்ட கணவரை விடுதலை செய்ய போலீஸ் வேடத்தில் சென்று போலீஸ் அதிகாரிகளை மிரட்டியது துணை நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் என்பவர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்த போது சக்ரபாணி என்பவரை  குடித்துவிட்டு மது ஓட்டியதாக கைது செய்தனர். அந்த நபரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து கொண்ட போது திடீரென காவல் நிலையத்திற்குள் ஒரு பெண் நுழைந்து, தான் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என்றும் கைது செய்யப்பட்ட சக்ரபாணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிகாரமாக கூறியுள்ளார் 

அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான பதில்களை கூறியதை அடுத்து அவரை உயர் அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். உயர் அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் சூரிய பிரியா என்றும், அவர் ஒரு துணை நடிகை என்றும், பல முறை இவர் இதேபோல் போலீஸ் உடை அணிந்து ஏமாற்றியிருந்ததாகவும், தற்போது கைது செய்யப்பட்ட தன்னுடைய கணவரை விடுவிக்க  போலீஸ் உடையில் வந்து இருந்ததும் தெரிய வந்தது 

இதனை அடுத்து சூரிய ப்ரியாவையும் கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது கணவன், மனைவி இருவரும் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.