close
Choose your channels

விஜய்சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட வணிகர்கள் திட்டம்: பெரும் பரபரப்பு

Friday, November 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக வணிகர் சங்க அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் வணிகம் அதிகரித்து வருவதால் சிறுகுறு வியாபாரிகள் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தீபாவளியின் போது கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆன்லைன் நிறுவனங்கள் விற்பனை செய்ததால் கடைகள் வைத்து வணிகம் செய்பவர்களின் வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை தி.நகர் உள்ளிட்ட இடங்களில் தீபாவளிக்கு உடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க இந்த ஆண்டு குறைவாகவே வாடிக்கையாளர்கள் வந்தனர். இதனை அடுத்து ஆன்லைன் வணிகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று வணிகர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் தனியார் ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதற்கு தமிழ்நாடு வணிகர் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வணிகர் சங்க அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’சிறுகுறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கி கொண்டு துணை போகும் நடிகர் விஜய் சேதுபதியை கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 4-ம் தேதி காலை 10 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதி அலுவலகத்தை வணிக போராளி கொளத்தூர் த.ரவி அவர்களின் தலைமையில் முற்றுகையிடப்போவதாகவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.