ஓடும் ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த இளைஞர்: ஒருதலை காதலா?

  • IndiaGlitz, [Thursday,October 13 2022]

கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்த இளைஞர் ஒருவர் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்த 23 வயது சதீஷ் என்பவர் அதே பகுதியில் உள்ள சத்யா என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த காதலை சத்யா ஏற்காத நிலையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இன்று இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சண்டை நடந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சதீஷ் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் மீது சத்யாவை தள்ளிவிட்டார். இந்த சம்பவத்தில் சத்யா மீது ரயில் ஏறியதால் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சதீஷ் அந்த இடத்தில் இருந்து தப்பி தலைமறைவாகி உள்ள நிலையில் அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட சத்யா ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் ராமலட்சுமி என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளன் என்பவரின் மகன் தான் கொலையாளி சத்யா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் அவர் கைதாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

ரகுல் ப்ரித்திசிங்கின் வருங்கால கணவர் இவர்தான்: சகோதரர் வெளியிட்ட தகவல்!

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் வருங்கால கணவர் இவர்தான் என ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' 3வது சிங்கிள் பாடல்.. எழுதி, பாடியது இந்த பிரபலமா?

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்தது என்பதும் இந்த படம் சென்சார்

வெங்கட்பிரபு-நாகசைதன்யா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை: வில்லன் யார் தெரியுமா?

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் 'NC22' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அமைதிக்கு முன் ஒரு புயல்: அஜித்தை வேற லெவலில் வர்ணித்த விக்னேஷ் சிவன்!

அஜித்தின் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் 'அமைதிக்கு முன் ஒரு புயல்' என வர்ணித்துள்ளார். 

இரட்டை குழந்தைகள் விவகாரம்: விக்கி- நயனிடம் விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! 

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் குறித்து விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.