close
Choose your channels

வெங்கட்பிரபு-நாகசைதன்யா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை: வில்லன் யார் தெரியுமா?

Thursday, October 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ’NC22’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நாக சைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்தப் படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஜீவாவிடம் படக்குழுவினர் அணுகியதாகவும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் ஜீவா இணைவது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் அவருக்கு இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.