close
Choose your channels

செல்போன் இல்லாததால் உயிரிழந்த கல்லூரி மாணவி! உடன்கட்டை ஏறினாரா காதலர்?

Thursday, September 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆன்லைன் படிப்புக்காக செல்போன் இல்லாததால் உளுந்தூர்பேட்டை மாணவி ஒருவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த மாணவியை வாலிபர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் காதலியின் மரணத்தை தாங்க முடியாத அவர் உடன்கட்டை ஏறி தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.

உளுந்தூர்பேட்டை அருகே மேட்டு நன்னாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த நித்யஸ்ரீ மற்றும் அவரது இரண்டு தங்கைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருந்தது. மூவரும் ஆன்லைன் படிப்புக்காக செல்போனுக்காக ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கொண்டனர். இதில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நித்யஸ்ரீ விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவரது பிணம் நேற்று எரியூட்டப்பட்டபோது, அவரை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் நித்யஸ்ரீ உடல் எரியும் தீயில் உடன்கட்டை ஏறியதாக கூறப்படுகிறது. வாலிபரின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

நித்யஸ்ரீ பிணத்துடன் இருந்த எலும்புக்கூடுகளை தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் நித்யஸ்ரீ உடலுடன் எரிந்த உடல் அந்த வாலிபரின் உடல் தானா என்பது ஆய்வில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

விஷம் குடித்த இறந்த கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்த வாலிபர் ஒருவர் உடன்கட்டை ஏறியதாக கூறப்படும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos